Wednesday, May 15, 2024

மாமன்னர் இப்போதைக்கு கலங்கிப்போய்தான் நிற்கிறார்

 2014

பாஜக ஆட்சிக்கு வருவதற்கான காரணங்களுள்
ஹசாரேவும் அவரது சிஷ்யப் பிள்ளையான கெஜ்ரிவாலும் உண்டு
2G எனும் ஊகத்தை ஊதிப் பெரிதாக்கி மாமன்னரைத் தூக்கி வந்து சிம்மானத்தில் உட்கார வைத்ததில் அவர்களது பங்கு அலாதியானது
அடிப்படையில் கெஜ்ரிவால் RSS காரர்
அதனால் அவர்கள் தேர்த்லை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கெஜ்ரிவாலுக்கும்
கெஜ்ரிவால் எப்படி எதிர்கொள்வார் என்பது அவர்களுக்கும் தெரியும்
அதனால்தான் கைதே
இப்போது பாருங்கள்
மாமன்னர் ராமர் என்கிறார்
கெஜ்ரிவால் அனுமான் என்கிறார்
அவர்கள் எதிர்க் கட்சிகளிடம் உள்குத்து குடைசலைத் தருகிறார்கள்
கெஜ்ரிவால் மன்னர் அல்ல அவர்களது சாய்ஸ், அவர்களது சாய்ஸ் ஜெய்ஷாவின் அப்பா என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்
உள்ளுக்குள் புகைகிறது
இது ராகுலால் முடியாதது
எனவே இந்தப் பகுதியை கெஜ்ரிவால் பார்த்துக் கொள்ள
சாதியால் விழுந்தவர்கள் சாதியால்தான் எழ வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று இன்னொரு பகுதிக்கு அவர்களை இழுக்கிறார்
ப்ரியங்கா ஒரு பக்கம் இழுக்கிறர்
மாநிலக் கட்சிகள் இன்னும் சில பக்கம் இழுக்கின்றன
ஒன்று சொல்ல வேண்டும்
மாமன்னர் இப்போதைக்கு கலங்கிப்போய்தான் நிற்கிறார்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...