Saturday, May 2, 2020

கோவிட் கிருமியிடம் இருந்தும் ட்ரம்ப்பிடம் இருந்தும்

சுனாமி நம் மக்களைக் கொன்று குவித்திருந்த நேரம்
சோகத்தில் இருந்து நாம் அப்போது முற்றாய் மீண்டிருக்கவில்லை
ஓரு கூட்டம்
எனக்கு முன்னால் கவிதை வாசித்த தோழர்
ஒரே குழியில் நூற்றுக் கணக்கான மக்களை, குழந்தைகளைப் புதைத்த சோகத்தை கண்ணீரோடே வாசித்தார்
அழுதோம்
அடுத்து நான்
சுனாமி இந்தியாவைத் தாக்கப் போவது அமெரிக்காவிற்கு முன்பே தெரியும் என்பதையும்
சுனாமி தொடர்பான அந்த அமைப்பு இதை ஏற்கனவே கணித்திருந்தது
அதை முன்னமே இந்தியாவிடம் சொல்லி இருந்தால் இத்தனை பெரிய இழப்பை நாம் தவிர்த்திருக்க முடியும் என்பதையும்
அந்த அமைப்பில் இந்தியா உறுப்பு நாடல்ல என்பதால் சொல்லவில்லை என்று திமிரோடு அமெரிக்கா சொன்னதையும் சொன்னேன்
ஒரே குழியில் குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான மக்களைப் புதைத்த சோகத்தை சொல்லிப் புலம்பியவன்
நமது எதிரிக்குக் கூட
ஏன்
அமெரிக்காவிற்கேகூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று பேசினேன்
அந்த நிலை அமெரிக்காவிற்கும் வந்திருக்கிறது
அங்கே பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படங்களும்,
ஒரே குழியில் நூற்றுக் கணக்கான பிணங்களைப் புதைக்கும் படங்களும் வருகின்றன
நம் மக்கள் மரணத்திற்காக மட்டுமல்ல,
உலக மக்களுக்காகவும்
அமெரிக்க மக்களுக்காகவும் சேர்த்தே இந்திய மக்கள் அழுகிறோம்
ஆனால்
திரு ட்ரம்ப் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதே அய்யமாக இருக்கிறது
பல ஆண்டுகளுக்கு முன்னமே பில் கேட்ஸ் இப்படியான ஒரு வைரஸ் தாக்குதலைக் குறித்து அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்
சோம்ஸ்கி எச்சரித்திருக்கிறார்
ஆனால் அமெரிக்கா இது குறித்து அக்கறை எடுத்துக் கொள்ளவே இல்லை
எச்சரிக்கைகளுக்குப் பிறகு மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதியைத் தொடர்ந்து அமெரிக்கா குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது
கோவிட் வந்தபிறகும் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் அசிங்கமாகவே உள்ளது
WHO விற்கு நிதியை ரத்து செய்கிறார்
கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்த முடியுமா என்று யோசிக்கிறார்
கோவிட் கிருமியிடம் இருந்தும் ட்ரம்ப்பிடம் இருந்தும் அமெரிக்க மக்களைக் காப்பாற்று என்று புலம்ப ஒரு கடவுள் இருந்தால் தேவலாம்தான்
#சாமங்கவிந்து 23நிமிடங்கள்
24.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...