கடலூரில் அண்ணலின் சிலைக்கு நேற்று காலை செருப்பு மாலை அணிவித்தவரை கைது செய்துள்ளது காவல்துறை
அண்ணலின் சிலைக்கு செருப்பு மாலையிட்டவர் இவர்தானென்று தம்பி ஸ்டாலின் தி யின் பக்கவழி அறிய முடிகிறது
பொதுவாக அம்புகளோடு நமக்கு ஒருபோதும் பிணக்கு இல்லை
அம்புகளுக்கும் அவை தைத்துக் கிழிக்கும் உடல்களின்மீது ஒருபோதும் பகை எதுவும் இருப்பது இல்லை
பாவமாக இருக்கிறது
எவர் தலைமீது வேண்டுமாயினும் கைவைத்து சத்தியம் செய்வேன்
இந்த மனிதனுக்கு அண்ணல் குறித்து எதுவும் தெரியாது
கொஞ்சம் போதை
சில துண்டு கோழி வருவல்
கையில் கொஞ்சம் காசு
போதையோடு சேர்த்து சாதி வெறியூட்டல்
செய்திருக்கிறார்
நமது கோரிக்கை இதுதான்
எய்தவன் யாரென்று விசாரிக்க வேண்டும்
அவர்களைக் கைது செய்து கடுந்தண்டனை வாங்கித் தரவேண்டும்
என்னதான் அம்பின்மீது நமக்கு கோவம் இல்லை எனினும்
உடலைத் தைத்ததும் பிடுங்கி உடைத்து எறிவோமல்லவா
ஆக இவருக்கும் தண்டனை வேண்டும்
இனியொருமுறை இதுபோல காரியங்களைத் திட்டமிடக்கூடாது
அப்படி ஒரு தண்டனை எய்தவனுக்கும்
இனியொருமுறை இப்படி ஒரு செயலை எவனும் செய்யக்கூடாது
அப்படி ஒரு தண்டனை இந்த மனிதருக்கும் வழங்க வேண்டும்
02.04.2020
02.04.2020

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்