Saturday, May 2, 2020

என்னதான் அம்பின்மீது நமக்கு கோவம் இல்லை எனினும்





கடலூரில் அண்ணலின் சிலைக்கு நேற்று காலை செருப்பு மாலை அணிவித்தவரை கைது செய்துள்ளது காவல்துறை
அண்ணலின் சிலைக்கு செருப்பு மாலையிட்டவர் இவர்தானென்று தம்பி ஸ்டாலின் தி யின் பக்கவழி அறிய முடிகிறது
பொதுவாக அம்புகளோடு நமக்கு ஒருபோதும் பிணக்கு இல்லை
அம்புகளுக்கும் அவை தைத்துக் கிழிக்கும் உடல்களின்மீது ஒருபோதும் பகை எதுவும் இருப்பது இல்லை
பாவமாக இருக்கிறது
எவர் தலைமீது வேண்டுமாயினும் கைவைத்து சத்தியம் செய்வேன்
இந்த மனிதனுக்கு அண்ணல் குறித்து எதுவும் தெரியாது
கொஞ்சம் போதை
சில துண்டு கோழி வருவல்
கையில் கொஞ்சம் காசு
போதையோடு சேர்த்து சாதி வெறியூட்டல்
செய்திருக்கிறார்
நமது கோரிக்கை இதுதான்
எய்தவன் யாரென்று விசாரிக்க வேண்டும்
அவர்களைக் கைது செய்து கடுந்தண்டனை வாங்கித் தரவேண்டும்
என்னதான் அம்பின்மீது நமக்கு கோவம் இல்லை எனினும்
உடலைத் தைத்ததும் பிடுங்கி உடைத்து எறிவோமல்லவா
ஆக இவருக்கும் தண்டனை வேண்டும்
இனியொருமுறை இதுபோல காரியங்களைத் திட்டமிடக்கூடாது
அப்படி ஒரு தண்டனை எய்தவனுக்கும்
இனியொருமுறை இப்படி ஒரு செயலை எவனும் செய்யக்கூடாது
அப்படி ஒரு தண்டனை இந்த மனிதருக்கும் வழங்க வேண்டும்

02.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...