Saturday, May 2, 2020

இப்போது காலம் ஒரு நல்ல வாய்ப்பை தந்திருக்கிறது

ஒரு சிலைக்கு ஆர்டர் கொடுப்பதற்காக ஒரு கலைக் கூடத்திற்கு அவரது நண்பர் வந்திருக்கிறார்
அங்குள்ள சிலைகளை ரசித்துக் கொண்டே வந்தவர்
ஒரு சிலையின் அழகில் லயித்துப் போய் நின்றிருக்கிறார்
“ராஜன், இந்த சிலையைக் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக்கவா?”
“தாரளமா” என்று சொன்ன ராஜன் கோவிலுக்குப் போகிற வரைக்கும் யார் வேண்டுமானாலும் தொடலாம் என்றும் கோவிலுக்குப் போனதும் இரண்டுபேரைத் தவிர வேறு யாரும் தொட முடியாது
”ரெண்டுபேரா?
ஒருத்தர தெரியுது,
இன்னொருத்தர் யாரு?”
என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்கிறார்
திருடன்”
விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்
நான் தொட்டதுனால சாமி தீட்டுப் பட்டுடாதா?
விடுப்பா, ஒரே டம்ளர் தண்ணில தீட்டக் கழிச்சிடுவாங்க
பாபு ஜெகஜீவன் அவர்கள் அப்போது மத்திய அமைச்சர்
ஒரு ஆலயத்திற்குள் போகிறார்
வழிபடுகிறார்
திரும்பிவிட்டார்
ஆலயம் தீட்டுப் பட்டுவிட்டது என்று ஆலயத்தைத் தீட்டுக் கழிக்கிறார்கள்
இன்றைய குடியரசுத் தலைவர் இறைவழிபாடு செய்வதற்காக ஒரு ஆலயத்திற்குள் நுழைய முற்படுகிறார்
தடுக்கப்படுகிறார்
வாசலில் அமர்ந்து வழிபாட்டை முடித்துக் கொண்டு கிளம்புகிறார்
அது எப்படி ஜெகஜீவன் உள்ளே போக முடிந்தது?
அது எப்படி குடியரசுத் தலைவர் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லை?
இப்படிக் கேட்போம்
ஒரு அமைச்சரே உள்ளே போக முடிந்த பொழுது இந்த நாட்டின் தலைமகனால் ஏன் நுழைய முடியாமல் போனது?
காரணம்
அப்போது காங்கிரஸ் ஆட்சி
இப்போது பிஜேபி ஆட்சி
காங்கிரஸ் ஆட்சி உள்ளே அனுமதித்தது. பிறகு தீட்டுக் கழித்தது
இன்றைய ஆட்சி அனுமதியை மறுக்கிறது
எதார்த்தம் இப்படி இருக்கையில்
ஆலயத்திற்குள் நம் மக்கள் உள்ளே செல்வதும்
மருந்து அடிப்பதும்
தீர்வே ஆகாது
என் அன்பிற்குரியவர்களே
இப்போது மட்டும் அல்ல
ஆலயக் கட்டுமானத்தின் போதும் நம் மக்கள் உள்ளே சென்றவர்கள்தான்
கொரோனா போனதும் மீண்டும் அவர்கள் வருவார்கள்
தீட்டுக் கழிப்பார்கள்
அவரவரும் அவரவர் இடத்தில் நிற்க சொல்வார்கள்
பதட்டப் படாமல்
கவனமாக செயல்பட வேண்டும்
இன்றைக்கும் பல ஊர்களில்
ஊருக்கு ஒன்று
சேரிக்கு ஒன்று என்று
இரண்டு தேவாலயங்கள் இருக்கின்றன
தொண்டமாந்துறை என்ற இடத்தில் மாதாவின் தேர் சேரிக்குள் வராது என்றார்கள்
ஏன் என்று கேட்டபோது
மாதா சேரிக்குள் வந்தால் மாதா தீட்டுப்படும் என்றார்கள்
சரி என்று
அவர்கள் தங்களுக்கு ஒரு தேரை நிறுவினார்கள்
ஊருக்குள் தேர் வரக்கூடாது என்றார்கள்
ஏன் என்று இப்போதும் கேட்டார்கள்
உங்கள் மாதா எங்கள் தெருவிற்கு வந்தால் தெரு தீட்டுப் பட்டுவிடும் என்றார்கள்
இப்போது காலம் ஒரு நல்ல வாய்ப்பை தந்திருக்கிறது
ஆலயங்கள் எல்லோருக்குமானது
யாரும் பிரவேசிக்கலாம் என்ற நிலை காண என்ன செய்யலாம் என்று யோசிப்போம்

26.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...