Tuesday, September 26, 2023

உறுதியாக சொல்கிறோம் காங்கிரசும் பாஜகவும் ஒன்றல்ல

 காங்கிரஸ் என்னங்க

பிஜேபி என்னங்க

ரெண்டும் ஒன்றுதானே 

இப்ப அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்குன்னா

அவங்க காலத்தில் எமர்ஜென்சியே அமலில் இருந்ததே

அவங்க விற்க ஆரம்பித்தாங்க

இவங்க விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் 

அவ்வளவுதானே

ரெண்டுக்கும் இடையில் அப்படி என்ன வித்தியாசத்தைக் கண்டு பிடித்தீர்கள் என்பவர்களுக்கு

எமர்ஜென்சியை இந்திரா காந்தி கொண்டுவந்ததையோ அதன் கொடூரமான விளைவுகளையோ இல்லை என்று மறுக்கவில்லை

அதே இந்திராகாந்தி தான் எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததற்காக மக்களிடம் மன்னிப்பைக் கேட்டார்

இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது கிட்டத்தட்ட இரண்டாயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டனர்

அப்போது அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி,

”ஒரு ஆலமரம் சாய்ந்தால் மண் அதிரத்தான் செய்யும்” என்று திமிராக பதில் சொன்னார்

ஆனால்

அந்தப் படுகொலைகளுக்காக சோனியா காந்தி காங்கிரச் சார்பாக மக்களிடம் வருத்தம் தெரிவித்தார்

சரியாக தெரியாததால்தான் வருத்தம் தெரிவித்தார் என்று சுறுக்கிக் கொள்கிறேன்

என் நினைவின் ஒரு மடிப்பு அவர் மன்னிப்பு கேட்டதாகவே சொல்கிறது

இப்போது நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்

ஏறத்தாழ 90 செயலர்கள் ஒன்றிய அரசில் இருப்பதாகவும்

அவர்களில் மூன்றே மூன்றுபேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும்

இது திட்டங்களை வகுப்பதிலும்

செயல்படுத்துவதிலும் ஓபிசியினரை பாதிக்காதா என்று ராகுல் கேட்கிறார்

உடனே

இதே நிலைதானே காங்கிரஸ் அரசாங்கத்தின்போதும் இருந்தது என்று பிஜேபி சொன்னபோது

ஆமாம், அதற்காக நான் வருந்துகிறேன்

I REGRET என்று கூறிய ராகுல்

ஆட்சி தங்களிடம் வரும்போது அதை சரிசெய்வோம் என்கிறார்

செய்த தவறுகளை உணர்வதும்

தாம் செய்த தவறுகளால் விளைந்த விளைவுகளுக்காக வருந்துவதும்

தம் தவறுகளினால் பாதிக்கப் பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதும் நல்ல தலைவனின் அடையாளம்

அந்த இடத்திற்கு சன்னம் சன்னமாக ராகுல் வருகிறார்

உறுதியாக சொல்கிறோம்

காங்கிரசும் பாஜகவும் ஒன்றல்ல 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...