Monday, September 25, 2023

சூரியனை சோதிக்க கலம் அனுப்பியிருக்கும் சகோதரியும்

 அன்பின் முதலவர் ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்

யோகி ஆதித்த்யநாத் படங்களை அட்டைப் படங்களாகக் கொண்ட கீழே உள்ள இரண்டு புத்தகங்கள் இன்று தோழர் சுதா பணியாற்றும் பள்ளிக்கு வந்துள்ளன

  
அந்த நூல்கள் கீழ்க்காணும் முகவரியில் இருந்துதான் பதிவுத் தபாலில் அனுப்பப் பட்டுள்ளன



இரண்டு நூல்களும் இந்தியில் உள்ளதாகவும்,

அந்தப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்தப் புத்தகக் கட்டு வந்திருப்பதாகவும் தபால்காரர் கூறியதாகவும் அவர் கூறுகிறார்

அதே முகவரிக்கு அந்தப் புத்தகங்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் சுதா கூறினார்

அவரது நண்பர்களைத் தொடர்புகொண்டு 

விசாரிக்கவும்,

அப்படி அவர்களுக்கும் வந்திருப்பின் அதைத் திருப்பி அனுப்புமாறு சொல்லவும் அவரைக் கேட்டுக் கொண்டேன்

அன்பிற்குரிய சார்

இது தமிழ்நாடு முழுக்க வந்திருக்கிறதா?

எந்த வகையான பள்ளிகளுக்கு வந்திருக்கிறது?

உபியின் இந்தச் சேட்டைக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

பள்ளிகளிகளுக்கு என்றால்

பள்ளிகளின் முகவரிகளை எப்படித் திரட்டினார்கள்?

அது ஒன்றும் சிரமம் இல்லை

அதுவும் ஒன்றிய அரசு அவர்கள் கைகளில் இருக்கும்போது இது மிக மிக சுளுவான வேலைதான் அவர்களுக்கு

ஏன் இதை செய்கிறார்கள்

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதன் மூலம்

இவை ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு அனுப்பப்பட்டவை

எனில்,

இவற்றை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுப்ப வேண்டியத் தேவை உபிக்கு ஏன் வந்தது?

எதை இதன் மூலம் நமக்கு உணர்த்த வருகிறார்கள்?

அந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன?

எது எப்படியோ தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு தெரியாமல் இது நடந்திருக்கும் பட்சத்தில் இது 

அத்துமீறல்

மாநிலங்களும் இறையாண்மை உடையனதான்

எனில்

தமிழ்நாட்டின் இறையாண்மையோடு விளையாடுகிற மோசமான சேட்டை இது

நமது பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிந்தே இது நடந்திருக்கிறது என்றால்

உங்கள் மொழியில் சொல்வதெனில்,

திராவிடத்தின் மீதான உபி ஆரியத் தாக்குதலுக்கான நமது துறையின்

கருப்பாட்டுத் தனம் இது

விசாரியுங்கள்

ஆம் எனில் 

நடவடிக்கை எடுங்கள்

இப்படியான செய்கை இயல்பானது எனில்

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு,

அரசுப் பள்ளிகளில் படித்த பெண்குழந்தைகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை

பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் 

தமிழ் நாட்டில்

அரசுப் பள்ளிகளில் படித்த

அதுவும் தமிழ் வழியில் படித்த

இன்னும் சரியாக சொல்வதெனில்

இந்தி தெரியாத

மயில்சாமி அண்ணாதுரை
வனிதா முத்தையா
வீரமுத்துவேல்

இந்த மூன்று தமிழர்களும்தான் இதுவரையிலான மூன்று சந்திராயன்களுக்கும் பொறுப்பு என்பதையும்

சூரியனை சோதிக்க கலம் அனுப்பியிருக்கும் சகோதரியும்

தமிழ்நாட்டில்

அரசுப்பள்ளியில் படித்தவர்

இஸ்லாமியர்

அதுவும் இஸ்லாமியப் பெண்

போன்ற விவரங்களை இந்தியில் புத்தகங்களாகப் பதிப்பித்து

உபி பள்ளிகளுக்கு அனுப்பினால் என்ன

மதுரை ரயில் விபத்தை

அதை

தமிழ்நாடும் தமிநாடு அரசும் எதிர்கொண்ட விதத்தை

குறிப்பாக

பிடிஆரின் பங்களிப்பை

இந்தியில் அச்சிட்டு அனுப்பினால் என்ன

யோசியுங்கள்

நன்றி

அன்புடன்,
இரா.எட்வின்
25.09.2023

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...