Tuesday, September 26, 2023

குட்டையைக் குழப்புகிற வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்

நேற்று இரவு பதினோறு மணி அளவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் நண்பர் அருள்முருகன் சார் வாட்ஸப்பில் வந்தார்

சுதா டீச்சர் எந்த மாவட்டம்?

எந்தப் பள்ளியில் பணியாற்றுகிறார்?

நீங்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் எல்லாப் பள்ளிகளுக்கும் போகின்றனவா?

அல்லது,

உயர்நிலை

மேல்நிலை

நடுநிலை

தொடக்கப் பள்ளி என்று 

ஏதேனும் ஒருவகைப் பள்ளிகளுக்கு மட்டும் செல்கிற்தா என்று கேட்டிருந்தார்

விழித்துதான் இருக்கிறார் என்பது உறுதியானதால்

அழைத்தேன்

வணக்கம்

நலமா?

உள்ளிட்டு எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் நேரடியாக வந்துவிட்டார்

எந்த மாவட்டம் எட்வின்?

கள்ளக்குறிச்சி

என்ன எட்வின் இது?

பதறாதீங்க சார், அடுத்து உறுதியான மாவட்டம் புதுக்கோட்டை

தேவதா தமிழ்  இதை உறுதி செய்கிறார்

அதற்குமேலான உரையாடல் இங்கு தேவை இல்லை

இன்று அமைச்சருக்கு இந்தத் தகவலை கொண்டுபோவதாகக் கூறி இருக்கிறார்

பிற மாவட்டங்களுக்கும் வந்திருப்பின் நண்பர்கள் தெரியப்படுத்தவும்

அமைச்சர் என்ன சொல்கிறார் என்று பார்த்திருப்போம்

இதைப் படித்துவிட்டு ஒரு தபால்காரத் தம்பி தொடர்பு கொண்டார்

அதிமுக ஆட்சி காலத்திலும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு இதேபோல புத்தகங்கள் வந்ததாகவும்

கூகுலில் மொழிபெயர்த்தபோது

இஸ்லாமியர்கள் அங்கங்கே ஆலயங்களை சேதப்படுத்துவதாகவும்

வன்முறையில் இறங்குவதாகவும்

இந்துக்கள் ஒன்றிணையாவிட்டால் இந்து சமயம் அழிந்துவிடும் என்றும் இருந்ததாகக் கூறினார்

அவைகளும் இந்தியில் மட்டுமே வந்ததாகவும் கூறுகிறார்

குட்டையைக் குழப்புகிற வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்

தமிழ் மண்ணில் நஞ்சைத் தூவ ஆரம்பித்திருக்கிறார்கள்

விழித்துக் கொள்வோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...