படித்தோரை
படித்த படிப்பிற்கு
பணி தேடித் திரிந்தோரை
காதைத்
திருகி
கரம்பிடித்து
இடதிழுத்து
பசித்தோரை
பசிக்கான காரணத்தை
அறியாத எளியோரை
நினை
அவனுக்காய்
களமேகி உழை என்றுரைத்த
ஊனே
எங்கள் உயிரே
செங்கொடியே
வைகை நீராட
மாமதுரை போனவளே
பார்க்க வாய்க்காமல்
நான் போக வாய்ப்புண்டு
பிள்ளைக்கும்
பேரனுக்கும்
வாய்க்காமல் போனாலும்
என்
எள்ளோ
கொள்ளோ
இல்லை
அடுத்தடுத்து வருபவரோ
உன்னை
கோட்டை ஏற்றி
வருங்காலம்
காப்பார்கள்
இன்குலாப்
இன்குலாப்
இன்குலாப்
ஜிந்தாபாத்
02.04.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்