Wednesday, April 2, 2025

03.2025

 படித்தோரை

படித்த படிப்பிற்கு
பணி தேடித் திரிந்தோரை
பணியில் அமர்ந்தோரை
பணி தந்த ஊதியத்தில்
சொகுசள்ளிப்
புசித்தோரை
காதைத்
திருகி
கரம்பிடித்து
இடதிழுத்து
பசித்தோரை
பசிக்கான காரணத்தை
அறியாத எளியோரை
நினை
அவனுக்காய்
களமேகி உழை என்றுரைத்த
ஊனே
எங்கள் உயிரே
செங்கொடியே
வைகை நீராட
மாமதுரை போனவளே
பார்க்க வாய்க்காமல்
நான் போக வாய்ப்புண்டு
பிள்ளைக்கும்
பேரனுக்கும்
வாய்க்காமல் போனாலும்
என்
எள்ளோ
கொள்ளோ
இல்லை
அடுத்தடுத்து வருபவரோ
உன்னை
கோட்டை ஏற்றி
வருங்காலம்
காப்பார்கள்
இன்குலாப்
இன்குலாப்
இன்குலாப்
ஜிந்தாபாத்

02.04.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...