இன்று இருவர் கூறிய இரண்டு விஷயங்களை ஸ்டாலின் சார் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது
முதல் விஷயத்தை சொல்லியிருப்பவர் மருத்துவர் அய்யா
இன்றே துணை வேந்தர்களை நியமித்து விடுங்கள். பிரச்சினை இருந்தால் அவர்கள் கோர்ட்டுக்கு போகட்டும் என்கிறார்
இன்னொருவர் தோழர் தராசு ஷ்யாம்
ஆளுனருக்கு ஒரு மசோதா வருகிறது
ஒப்புதல் கொடுக்க வேண்டும்
அல்லது நிராகரிக்க வேண்டும்
தேவைப்படும் பட்சத்தில் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்
ஆளுநர் திருப்பி அனுப்பியபிறகு அதை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றி அவருக்கு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழி இல்லை
இரண்டாவது முறையாக வரும் மசோதாவை திருப்பி அனுப்பவோ குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ அவருக்கு அதிகாரம் இல்லை
சரி, இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரேகூட நிராகரிக்க முடியாது என்கிறது தீர்ப்பு
எனவே நீட் விலக்கு குறித்த கோரிக்கையை குடியரசுத்தலைவருக்கு ஆளுனர் அனுப்பியதும் தவறு
நீட் விலக்கை குடியரசுத் தலைவர் நிராகரித்ததும் தவறு
எனவே இன்றுமுதல் தமிழ்நாட்டில் நீட் இல்லை என்று அறிவியுங்கள் என்றும்
அவர்களுக்கு பிரச்சினை என்றால் அவர்கள் கோர்ட்டிற்கு போகட்டும் என்று ஷ்யாம் சொல்கிறார்
இவை இரண்டையும் ஸ்டாலின் சார் பரிசீலிக்க வேண்டுகிறோம்
10.04.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்