ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அரிவாளால் வெட்டியிருக்கிறான்
பதறுகிறது
ஒன்றும் ஆகவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது
பள்ளிக் கட்டமைப்பைக் குற்றம் சொல்கிறார்கள்
ஆசிரியர்கள் சரியில்லை என்கிறார்கள்
குழந்தைகள் சரியில்லை என்கிறார்கள்
எந்த ப்ரிஜுடிசும் இல்லாமல் நெருக்கமான காரணத்தை
திரைப் படங்கள் ஒரு காரணம் என முன்வைக்கிறார் Bhuvana Gopalan
மேற்சொன்ன எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறதுதான்
ஆனால் அதே திருநெல்வேலியில் இருந்து ஒரு தலைவர்
வைரமுத்த கொல்ல வேணாமா என்று கொலைவெறியை மேடை போட்டுத் தூண்டுகிறார்
ஆன்மீகப் பெரியவர்கள் அந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்
இதைத் தவறென்று அவர்கள் கண்டிக்கவில்லை
பிரதமர் கண்டிக்கவில்லை
சகோதரிகள் வானதி தமிழிசை என்று யாரும் அவரைக் கடிந்து கொள்ளவோ நெறிப்படுத்தவோ இல்லை
ஒரு தலைவர் இப்படிப் பேசினால் குழந்தைகள் இப்படித்தான் மாறுவார்கள் என்று யாரும் அவர் நோக்கி சுட்டுவிரலை நீட்டவில்லை
கொலைவெறியைத் தூண்டுகிற அந்தத் தலைவரை ஒன்றியத்தை ஆள்கின்ற கட்சி
தனது மாநிலத் தலைவராக அங்கீகரித்து ஆசிர்வதிக்கிறது
துயரம் என்னவெனில் அந்தக் கட்சியும் அந்தத் தலைவரும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காகக் கொந்தளிப்பதுதான்
17.04.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்