அன்பின் மார்க்ஸ்,
வணக்கம்
அந்த இந்தியச் சீமான் ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தார்
எல்லோரும் வரிசையாக வந்து பாதம் பணிவார்கள் என்றார்கள்
பூச்சாண்டியாக மட்டும் பார்க்கக்கூடாது
அவர்களை ஆராயவும் வேண்டும் என்றீர்களே
அவர் சாதாரண பூச்சாண்டியல்ல பிள்ளைப் பிடிக்க வந்த பூச்சாண்டி என்று தெரிந்திருந்தது எல்லோருக்கும்
சாத்திய வீட்டிற்குள்ளிருந்து ஜன்னலைக் கூட திறந்து பார்க்கவில்லை சித்தப்பாவே என்றால் பாருங்கள் மார்க்ஸ்
அந்த சீமான் வந்ததே சித்தப்பாவிற்காகத்தான்
வேறொன்றுமில்லை மார்க்ஸ்,
சித்தப்பாவிற்கு பின்னால் ஒரு இருபது சதம் வாக்கிருக்கிறது
வருகிறாயா இல்லையா என்று மிரட்டினார்கள்
வரவில்லை
சித்தப்பாவிடம் இருக்கும் 20 சதம் வாக்கு சீமானின் முகத்தில் வழிந்த அவமானத்தைத் துடைத்தது
வீர சாணக்கியன் சித்தப்பா வீட்டுக் கதவைத் தட்டினார்
அந்த நேரம் பார்த்து சித்தப்பாவின் சம்பந்தி அலைபேசியில் அழைத்தார்
சித்தப்பா கண்முன் கம்பிகள்
கதவைத் திறந்து காபி கொடுத்தார்
சம்பந்தம் கலந்ததாக சாணக்கியன் சொன்னார்
சித்தப்பாவிற்கும் ஈயாடவில்லை
20,000 புத்தக அலமாரிக்கும் ஈயாடவில்லை
நாலு கோடி ரூபாய் டிராலியும் சாணக்கியத் துருவும் சிரித்தன
அற்பவாதம்தானே மார்க்ஸ்
அற்பவாதத்தின் மீதான தாக்குதலை கூராக ஒருங்கிணைக்காத நீயும் அற்பவாதி என்றுதானே சொல்ல வருகிறீர்கள்
கொஞ்சம் பொறுங்கள் மார்க்ஸ்
செவிட்டு மிசினை கழட்டி விட்டு வருகிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்