Showing posts with label ஆளுநர்ரவ. Show all posts
Showing posts with label ஆளுநர்ரவ. Show all posts

Tuesday, April 29, 2025

தயவு செய்து படிக்க வேண்டியதைப் படிங்க

சட்டவிரோதமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றம் சொன்ன ஒருவர் 

இவரது பணிகளில் நேர்மையில்லை என்று உச்சநீதிமன்றம் சொன்ன ஒருவர்

தனது வேலையை சரிவர செய்யாதவரென்று உச்சநீதிமன்றத்தால் இடித்துரைக்கப்பட்ட ஒருவர் அழைத்தார் என்பதற்காக 

 எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களரசிற்கு குடைச்சல் தருவதற்கு வந்திருந்தாலும் 

 குடைச்சலைத் தருவது யாரென்ற போதும் எதிர்கொள்வோம் என்றபோதும்

 நீங்கள் இன்றையத் தேதியில் எங்கள் ஒன்றியத்தின் இரண்டாவது மகன்

அம்மா இரண்டாவது மகள் புத்தகம் தந்து வரவேற்கிறோம் 
 
தயவு செய்து படிக்க வேண்டியதைப் படிங்க

Tuesday, April 22, 2025

அவர் வேந்தரா இல்லையா

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தான் உச்சநீதிமன்றம் அரசிற்கு வழங்கியுள்ளதாகவும்
ஆனாலும் தான் தான் வேந்தரென்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும் ஆளுநர் கூறுவதாகத் தெரிகிறது
ஆக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தன்னைக் கட்டுப்படுத்தும் என்பதை உணர்ந்தவராகவே அவர் இருப்பது புரிகிறது
அவர் வேந்தரா இல்லையா என்பதை தீர்ப்பை முழுதாக படித்தவர்கள் அவருக்கும் நமக்கும் தெளிவுபடுத்த வேண்டும்
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசிற்குத்தான் என்பதை உணர முடிந்த ஆளுநருக்கு
நியமிக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு என்பதும் புரிந்திருக்க வேண்டும்
அல்லது
புரியவைக்க வேண்டும்

Thursday, April 10, 2025

அவர்களுக்கு பிரச்சினை என்றால்

 இன்று இருவர் கூறிய இரண்டு விஷயங்களை ஸ்டாலின் சார் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது

முதல் விஷயத்தை சொல்லியிருப்பவர் மருத்துவர் அய்யா

இன்றே துணை வேந்தர்களை நியமித்து விடுங்கள். பிரச்சினை இருந்தால் அவர்கள் கோர்ட்டுக்கு போகட்டும் என்கிறார்

இன்னொருவர் தோழர் தராசு ஷ்யாம்

ஆளுனருக்கு ஒரு மசோதா வருகிறது

ஒப்புதல் கொடுக்க வேண்டும்

அல்லது நிராகரிக்க வேண்டும்

தேவைப்படும் பட்சத்தில் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்

ஆளுநர் திருப்பி அனுப்பியபிறகு அதை  மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றி அவருக்கு  அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழி இல்லை

இரண்டாவது முறையாக வரும் மசோதாவை திருப்பி அனுப்பவோ குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ அவருக்கு அதிகாரம் இல்லை

சரி, இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரேகூட நிராகரிக்க முடியாது என்கிறது தீர்ப்பு

எனவே நீட் விலக்கு குறித்த கோரிக்கையை குடியரசுத்தலைவருக்கு ஆளுனர் அனுப்பியதும் தவறு

நீட் விலக்கை குடியரசுத் தலைவர் நிராகரித்ததும் தவறு

எனவே இன்றுமுதல் தமிழ்நாட்டில் நீட் இல்லை என்று அறிவியுங்கள் என்றும்

அவர்களுக்கு பிரச்சினை என்றால் அவர்கள் கோர்ட்டிற்கு போகட்டும் என்று ஷ்யாம் சொல்கிறார் 

இவை இரண்டையும் ஸ்டாலின் சார் பரிசீலிக்க வேண்டுகிறோம்

10.04.2025

Wednesday, April 9, 2025

ஆளுநரே வேண்டாம் என்று

 ஆளுநரின் அதிகாரம் குறித்து 08.04.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஒப்பினீயன் தமிழ் சேனலில் தோழர் வல்லம் பஷீர் சொன்ன ஒரு விஷயம் எனக்கான பாடம்

கற்றுக் கொண்டேன்
ஆளுநரை ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது? என்று நினைப்பவன் நான்
அடிக்கடி அதுகுறித்து எழுதியும் வந்திருக்கிறேன்
ஏன் அரசியல் அமைப்பு நிர்ணய சபை இதை கணக்கி கொள்ளவில்லை என்ற அய்யமும் எனக்கிருந்தது
தோழர் வல்லம் பஷீர் நேர்காணலில் எனக்கு தெரிய வந்தது என்னவெனில்
இந்த விஷயத்தை அரசியல் நிர்ணயசபை அமைக்கும்போது கணக்கில் எடுத்திருக்கிறார்கள்
ஆளுநரே வேண்டாம் என்று பேசியிருக்கிறார்கள்
அம்பேத்கர் அமைதிப் படுத்தி இருக்கிறார்
மாநிலம் ஒன்றியம் இடையில் அப்படி ஒரு பொறுப்பு இருக்க வேண்டியது அவசியம். இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூறியிருக்கிறார்
சரி, தேர்ந்தெடுக்கலாமே
அப்போது அம்பேத்கர் சொன்னாராம்
அப்படி தேர்ந்தெடுத்தால் அவர் முதல்வரைவிட பெரியவர்போல நடந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். நியமனமே போதும்
அண்ணலுக்கும் நன்றி
பசீருக்கும் நன்றி

09.04.2025

Wednesday, August 14, 2024

பீஹார் மாதிரி தமிழ்நாட்டுக் கல்வியை ...

 திரு ரவி அவர்களுக்கு,
வணக்கம்


தமிழ்நாடு ஏதோ கல்வியில் அதல பாதாளத்தில் இருப்பது போலவும்

ஏதோ இந்தியாவிலேயே நீங்கள்தான் நான்காவது அறிவாளி போலவும் பாவித்துக் கொண்டு

எங்களுக்கு ஞான உபதேசம் செய்வதாக உளறிக்கொண்டிருப்பதையே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்

விஷேஷம் என்னவெனில்,

உளறுகிறபோதுகூட தவறியும் ஒரு துண்டு உண்மையையும் உளறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்

உண்மையை சொன்னால்

உண்மையோ ஞானமோ துளியும் இல்லாதவர் நீங்கள்

இப்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது

இந்தியாவில் உள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது

அந்தப் பட்டியலில் மன்னர் பிறந்த குஜராத் இல்லை, நீங்கள் பிறந்த பீஹார் இல்லை, யோகி பிறந்த உத்திரப் பிரதேசம் இல்லை

இந்த நிலையில் நீங்கள் தமிழ்நாடு குறித்து தொடர்ந்து இப்படி உளறிக்கொண்டே இருப்பதற்கும்

தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் நடைமுறைகளில் அசிங்கமாக தலையிடுவதற்கும்

கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் உங்கள் செயல் திட்டமோ என்ற அச்சம் வருகிறது

உங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பீஹாரை வெளிச்சப் படுத்த முயற்சி செய்யக் கிளம்புங்கள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...