டில்லி பாபு
10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்
கண்ணியமான அரசியல்வாதி
இதை போராட்டமாகக்கூட கொள்ள முடியாது
திண்டிவனத்தில் இருந்து ஆந்திரா நகரி வரைக்குமான மற்றும் NH 205 தேசிய நெடுன்சாலைத் திட்டத்திற்குமாக நிலம் கொடுத்த திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை
அதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், CPM கட்சியும் போராடிக்கொண்டிருக்கின்றன
அதன் ஒரு பகுதியாக 26.03.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப் போனபோதுதான்
தோழர் டில்லி பாபு இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்
திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திரு அந்தோணி கெட்டவார்த்தைகளால் வைதபடியே டில்லி பாபுவை இழுத்து போய் கைது செய்திருக்கிறார்
மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து மனு கொடுப்பது என்பது அவ்வளவு மோசமான செயலாகிப் போனதா என்பதை ஸ்டாலின் சார் விளக்க வேண்டும்
பாலியல் வழக்கு
காவல்துறை விசாரனைக்கு அழைக்கிறது
“முடியாது இப்ப என்ன பன்னுவ” என்று ஆணவத்தோடு பேச, கூடியிருந்தவர்கள் குதூகலித்துக் கொண்டாடியதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு காவல்துறை
ஒரு வழியாக விசாரனைக்கு வருகிறார். கோஷத்தோடு அவரை வரவேற்க ஒரு கூட்டமே காவல்நிலையம் முன்பு திரள்கிறது
சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்
காவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்
நியாயமா ஸ்டாலின் சார்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்