07.02.1950
சேலம் கிளைச் சிறை
”டேய்,
நம்பர் கட்டைய மாட்டு, குல்லாவப் போடு”
என்று காட்டுக் குரலில் கத்துகின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்
“நாங்கள் கிரிமினல்கள் அல்ல. அரசியல் கைதிகள் நாங்கள். உன் ஆணவ மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்”
எதிர்த்து கர்ஜிக்கின்றனர் அந்தக் கம்யூனிஸ்ட்கள்
மலபார் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு நேரு அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட,
ஆந்திரப் பகுதியில் பஞ்சாலைப் போராட்டத்தில் பங்கேற்று நேரு அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட,
மற்றும் தமிழ்ப் பகுதியில் போராட்டத்தில் கலந்துகொண்டு நேரு அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்ட
ஏறத்தாழ 350 கம்யூனிஸ்டுகள்
தண்ணீர் இறைப்பதற்கு மாடுகளுக்குப் பதில் கைதிகளை கட்டி இறைத்ததை எதிர்த்து
ரோடு ரோலர்களை இழுக்க வைத்ததை எதிர்த்து
வழங்கப்பட்ட மோசமான உணவை எதிர்த்து பட்டினிக் கிளர்ச்சியைத் தொடங்குகிறார்கள்
கிளர்ச்சித் தொடரத் தொடர அரசின் அடக்குமுறை அதிகரிக்கும் என்பதையும் சரியாக கணிக்கிறார்கள்
தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற தயாராகிறார்கள்
செங்கற்கள் உள்ளிட்டவற்றை தாக்குதலுக்காக சேமித்து வைக்கின்றனர்
இளைஞர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதியவர்கள் பலியாக முடிவெடுக்கிறார்கள்
11.02.1950
இன்றும் மிரட்டுகிறார்கள்
மறுக்கிறார்கள்
250 காவலர்கள் தடிகொண்டு அடிக்கிறார்கள்
துப்பாக்கிச் சூடு நடக்கிறது
திருச்செங்கோட்டைச் சேர்ந்த காவேரி முதலியார்
கடலூர் ஷேக் தாவூத்
சேலம் ஆறுமுகம் மற்றும்
கேரளாவைச் சேர்ந்த 19 தோழர்கள் உள்ளிட்டு 22 பேர் பலியாகிறார்கள்
எங்கள் தோழர்களின் 74 நினைவு நாளில்
கடந்த கால வரலாறுகளை எங்கள் இளந் தலைமுறையினருக்கு வருங்காலத்திலாவது முறையாக எடுத்துச் சொல்ல முயற்சிப்போம்
என்று உறுதி எடுக்கிறோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்