Monday, March 24, 2025

எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா

 இவர் போராடி இருக்கலாம்

அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கலாம்
ஆனாலும் இனி இவரால் ஒன்றும் வாய்க்காது
இவரைப் போய் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று
தோழர் Shanmugam Perumal அவர்களையும் அவரைத் தேர்ந்தெடுத்த கட்சியையும்
போகிற போக்கில் எழுதிவிட்டு போயிருந்தார்

எப்போதும் நான் மதிக்கும்
அவரது நான்கு வரி இரங்கலுக்காகவே அவருக்கு முன்னால் போய்விட வேண்டும் என்று நான் ஆசைப்படும் என் மரியாதைக்குரிய நண்பர்
நண்பர்கள் சுட்டினார்கள்
இதற்கிடையில் தோழர் P.S அவர்களோடு இரண்டரை மணி நேரம் பயணிக்கும் வாய்ப்பு முந்தா நாள் கிட்டியது
இடையே சொன்னார்
வாச்சாந்தி போராட்டம் குறித்து ஒரு பெண்ணிடம் நேர்காணல் எட்வின்
இத்தனை வலி, இத்தனை இழப்பு, இத்தனை தாமதம்
இத்தனையையும் எந்தத் தெம்பில் தாங்கி, விடாது போராடினீர்கள்? என்று கேட்டதும் அந்தப் பெண்
எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா என்று கட்சிக் கொடியைக் காட்டினாராம்
P.S போராடியாதாக PS அவர்களை வைத தோழரே பதிந்திருக்க
கொடி போராடியாதவே P.S கருதுகிறார்
இவ்வளவுதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...