நேற்று தோழர் இ.தாஹிர் பாட்சா அவர்களின் அப்பாவை இறுதியாக வழியனுப்பி வைப்பதற்காகப் போயிருந்தோம்
மழை
குடைக்குள் இருப்பதில் கவனமாக இருந்த என்னைப் பார்த்த நண்பர் கேட்டார்
”செவிட்டு மிஷினுக்கு ஒத்துக்காதுங்க சார்”
மருத்துவர் கருணாகரன் நிமிர்ந்து என்னைப் பார்க்கிறார்
“இதில் ஒன்றும் இல்லை தோழர். ஆனால், கேட்காதபோது நிறைய அவமானப்பட்டிருக்கிறேன் .” என்கிறேன்.
கண்கள் கசிந்தனதான். யாரும் பார்க்கவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
என்னை இழுத்துப் போய் மருத்துவரிடம் காட்டி மிஷினை மாட்டி கேட்கச் செய்த Kalai Mani மற்றும் தோழர் கணேசிற்கும்
அதுவரை எனக்கு கேட்கவேண்டும் என்பதற்காக சத்தமாகப் பேசி சிரமப்பட்ட அனைவருக்கும்
அன்பு
12.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்