22.03.1931
பகத்சிங் கொல்லப்பட்டதற்கு முதல் நாள்
அவர் தனது இறுதி கடிதத்தை எழுதுகிறார்
அவர் உயிர் வாழ்வதற்கு ஆசைப்படுகிறாரா என்ற கேள்வி அன்றைக்கு சமீபத்தில் சில நண்பர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக அது அமைந்திருக்கிறது
உயிர் வாழும் ஆசை அனைவருக்குள்ளும் இயல்பாகவே இருக்கும். அப்படியாகவே அந்த ஆசை தனக்கும் இருக்கிறது என்றும் அதை மறைப்பதற்கு தான் விருபவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் கூறுகிறார்.
அனால் தான் உயிர் வாழ்வதற்கு நிபந்தனை உண்டு என்று கூறுகிறார் . தன்னை வெகுவாக வசீகரித்த புரட்சிக் கட்சியின் தியாகங்களும் சித்தாந்தமும் தன்னை ஒரு சிறைக்கைதியாகவோ அடுத்தவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவனாகவோ ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறுகிறார்.
அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதைவிட சிரித்தபடியே தான் தூக்குமேடை ஏறும் காட்சியை இந்தியத் தாய்மார்கள் பார்த்தால் அது ஒரு உத்வேகத்தை அவர்களுக்கு கொடுக்கும் என்றும்
அந்தத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பகத்சிங்குகளாக வளர்ப்பார்கள் அல்லது அந்தப் பிள்ளைகள் தாங்களாகவே பகத்சிங்குகளாக மாறும்போது அதற்கு தடை சொல்லாமல் அனுமதிப்பார்கள்.
அப்போது முழு மனதுடன் ஆசை ஆசையாய் ஒரு பேரெழுச்சி திரண்டு வரும்
அந்தப் பேரெழுச்சியை ஏகாதிபத்தியத்தால் எதிர்கொள்ள முடியாது.
இது தூக்குமேடை ஏறுவதற்கு கிட்டத்தட்ட 15 மணிநேரத்திற்கு முன்னதாக பகத் எழுதிய கடிதம்
வணக்கம் பகத்
23.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்