தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும் தோழர் சங்கரய்யாவிற்கும் இடையே உள்ள தோழமை எல்லோருக்கும் தெரியும்.
தோழர் நல்லகண்ணுவிற்கும் கலைஞருக்கும் இடையே உள்ள உறவும் அனைவருக்கும் தெரியும்.
தோழர் நல்லகண்ணுவிற்கும் தோழர் கே.முத்தையாவிற்கும் இடையே இருந்த தோழமை குறித்த மிக அரிதான ஒரு தகவலை மானா பாஸ்கரன் தனது ‘’தோழர் நல்லகண்ணு’’ என்ற நூலில் தருகிரார்.
தோழர் நல்லகண்ணுவும் தோழர் கே.முத்தையாவும் வகுப்புத் தோழர்கள். அல்லது குறைந்த பட்சம் பள்ளித் தோழர்கள்.
இதுவே எனக்கு புதிய செய்தி.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு நிதி உதவியோ அல்லது படைக்கு ஆட்களைத் திரட்டவோ கூடாது என்று காங்கிரஸ் மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தது.
இவர்கள் பள்ளியில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு ஆதரவாக நாடகம் நடத்தி காங்கிரஸ் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்த இரண்டையும் சேகரிப்பது என்று சிலர் முயற்சி செய்தனர்.
தோழர்கள் இருவரும் சேர்ந்து அந்த நாடகத்தை நடக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர்.
பள்ளி நிர்வாகம் தோழர் கே.முத்தையாவை பளியில் இருந்து வெளியேற்றிவிட்டது.
தோழர் கே.முத்தையா பின்னாளில் இலங்கைக்கு சென்றுவிட்டார்.
அங்கிருந்தபடி மாதாமாதம் பத்து ரூபாயும் , வீரகேசரி இதழையும் நல்லகண்ணுவிற்கு அனுப்பி வந்தார்.
வீரகேசரியை தனக்கு வைத்துக் கொண்டு பத்து ரூபாயை நண்பர்களுக்கு செலவிட்டுவிடுவாராம் தோழர் நல்லகண்ணு.
தெரிந்துகொள்ள எத்தனை இருக்கு
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்