Monday, January 15, 2024

என்ன நியாயம் இது?

 

பாலின் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி இருக்கிறது மாநில அரசு

நாங்கள் பெரம்பலூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்துதான் பால் வாங்குகிறோம்

மாதா மாதம் முதல் தேதில் இருந்து நான்காம் தேதி வரைதான் பால் அட்டை வழங்கப்படும்

இந்த மாதம் அட்டை வாங்கிய பிறகுதான் கொள்முதல் விலையை அரசு உயர்த்துகிறது

மிக நல்ல விஷயம்

கொள்முதல் விலை உயர்ந்ததால் விற்பனை விலையை நான்கு ரூபாய் உயர்த்தியது பால் உற்பத்தியாளர் சங்கம்

இதுவும் சரி

அட்டை வாங்கியவர்கள் மிச்சத் தொகையை செலுத்தினால்தான் பால் தொடர்ந்து பெற முடியும் என்று பா. உ.சங்கம் பால் விநியோகிப்பவர்கள் மூலம் தெரிவித்தது

இதுவும் சரி

கட்டி விட்டோம்





அட்டையில் இரண்டாவதாக PAID என்று வைத்திருக்கும் சீல் அதற்கானது

எல்லாமே சரி

அரசு கொள்முதல் விலையை உயர்த்துகிறது

நீங்கள் விற்பனை விலையை உயர்த்துகிறீர்கள்

அரசு உயர்த்திய கொள்முதல் விலை தங்களுக்கு வரவில்லை பால் உற்பத்தியாளார்கள் பெரம்பலூரில் போராட்டம் நடத்தியதை14.01.2024 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது

என்ன நியாயம் இது?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...