Wednesday, January 17, 2024

ஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாது

 

காந்திமதி அக்கா விஷயமாக நானும் கலையும் தோழர் அன்பரசுவிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது Kalai Mani யிடம்
”டீ சாப்பிடலாமா”
அப்படி ஒரு முறைப்பு
அது என்னமோ தெரியல டீ கேட்டாக்க எல்லாப் புள்ளைங்களுமே இப்படித்தான் மொறைக்கிறாங்க
ஆனாலும் உடனே சிரித்தபடி வாங்கித் தருகிறாள்
இந்த ஈர மனசுதான் கலை. நூறு வருஷம் நீ இப்படியே நோய் நொடி இல்லாம இரு கலை
டீ குடித்து முடித்ததும் இருவரும் கிளம்பறோம்
ஒரு அம்மாவும் பிள்ளையும் வண்டியில் இருந்து இறங்குகிறார்கள்
நான் குழந்தையைப் பார்த்து சிரித்தபடியே ஹாய் சொல்லுகிறேன்
குழந்தை கண்டுகொள்ளவே இல்லை
அந்தப் பிள்ளையின் அம்மா அந்தக் குழந்தையை அழைத்து
யார் சிரிச்சாலும் சிரிக்கனும் சொல்லி இருக்கேன்ல தாத்தாட்ட ஹாய் சொல்லு என்று சொல்லவே ஹாய் சொன்னான்
வரம்
இது ஒன்னு மட்டும் லூசு இல்ல என்று கலை நினைத்திருக்கக் கூடும்
லூசுங்களாலதான் உலகம் இயங்குது தாயே
நீ நல்லா இரு தாயே
ஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாது
இது எனக்கு ஒரு ஹாய் வாங்கிக் கொடுத்த அந்தப் பொண்ணுக்கு
All reaction

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...