Tuesday, January 2, 2024

அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து

                                                                                                                                                                               காரைக்குடியின் குறுக்கும் நெடுக்குமாய்

சின்னச் சின்னக் குவியல்களாய்க்

கையேந்தித் திரியும் குழந்தைகள் குறித்து வைத்திருந்தேன்

என்ன நடக்கும் என்று இப்படி புலம்பற என்று

பொதுவில் வைப்பதற்குத் தயங்கி

அழைத்து அறிவுரை கூறிய நண்பர்கள் உண்டு

ஏதும் நடக்குமா?

அப்படியே நடந்தாலும் முழு நிவாரணமாக அது அமையுமா?

”அவர்கள்” நம்புவதுபோல ஏதுமே நடக்காதா?

முடிவு சொல்கிற தெளிவோ அறிவோ எனக்கில்லை

புவியரசு அய்யா ஒருமுறை சொன்னார்,

”ஒரு குழந்தையும் அம்மாவும் நடந்து போகிறார்கள்

அம்மாவை ஒரு சிறு கூட்டம் தொந்தரவு செய்கிறார்கள்

என்ன நடக்கிறது என்று குழந்தைக்குத் தெரியாது

ஆனால் அம்மாவிற்கு ஏதோ ஆபத்து என்பதை அந்தக் குழந்தை உணர்கிறாள்

தன்னால் காப்பாற்ற முடியாது

அழுகிறாள்

சத்தமாய் அழுகிறாள்

அந்தச் சத்தம் அவளது அம்மாவைக் காப்பாற்றும் என்று நம்புகிறாள்

அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து”
என்று

அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்

சத்தம் தோழர் வளவன் வசந்தா சித்தார்த்தா அவர்களுக்கு கேட்டிருக்கிறது

நிச்சயமாக ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கைத் துளிர்க்கிறது

அதன் பொருட்டே ஒரு கோப்பை தேநீர் குடித்தேன்

எல்லோரும் சத்தம் போட்டால் இன்னும் கொஞ்சம் உரத்துக் கேட்கும்

அவ்வளவுதான்

பெரியார் மண்

திராவிடம் ஆள்கிற பூமி

பண்டிதருக்கும், திராவிடத்திற்கும், இடதுசாரிகளுக்கும், அம்பேத்கரிஸ்டுகளுக்கும் நிச்சயமாக சொந்தமான பூமி

இந்தப் பூமியில் எந்தக் குழந்தையும்

அது எந்த மண்ணைச் சேர்ந்த குழந்தையாக இருந்தாலும்

கையேந்தக் கூடாது

புத்தகம் கையெடுக்க வேண்டும்

கூட்டம் கூட்டமாக குழந்தைகள் கையேந்துகிறார்கள் என்று கதறுவதும் அதற்காகத்தான்








All rea

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...