Wednesday, January 10, 2024

வேண்டாம் ஸ்டாலின் சார்

 

அன்பின் ஸ்டாலின் சார்,
வணக்கம்
போக்குவரத்துத் தொழிலாளிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்
புதியக் கோரிக்கைகள் எதுவும் இல்லை
தங்களது பணத்தைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்
துயரம் என்னவெனில்
இந்த வலியை நன்கு உணர்ந்த நீங்கள்
இந்த வலிக்கான நிவாரணம் கேட்டு குரல் குடுத்த நீங்கள்
அவர்களது வலியை உதாசீனப்படுத்துவதுதான்
இப்போதும்கூட தோழர் அ.சவுந்தரராஜன் சொன்னதுதான்
இது எங்களது அரசுதான்
உங்களுக்கும் புரியும்
எங்களது அரசானாலும் அதனோடும் தொழிலாளிகளின் நியாயத்திற்காக மல்லுக்கட்டவே செய்வோம்
நீங்கள் கேட்டுக் கொண்டால் பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்
போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு எதிராக
ஆளும் வர்க்கத்திற்கு ஆதாரவாக முதாலித்துவம் அதன் தொழிலாளிகளைக் கொண்டே உதவும்
கவனமாக இருங்கள்
உங்களுக்கும் மக்களுக்கும் ஒன்று சொல்வேன்
இடர் காலங்களில் ஆம்னி பேருந்துகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிப் பதுங்கும்
அப்போதும் மக்களுக்காகவும்
இடர்மிகும் காலத்தில் அரசின் பணிகளுக்கு உதவிடும் வகையிலும்
முழங்கால்த் தண்ணீர் பள்ளிக்கரனையிலும் இப்போது போராடிக்கொண்டு இருக்கும் தொழிலாளிகள் பேருந்துகளை இயக்குவார்கள்
இவர்கள் உங்கள் அரசின் தொழிலாளர்கள் ஸ்டாலின் சார்
2003 என்று பார்க்கிறேன்
ஆணவத்தின் உச்சியில் ஜெயலலிதா அம்மையார்
போராடிக்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக CITU தொழிலாளர்கள் ஒரு போஸ்டர் வைத்தார்கள்
“திருட்டுக் கொடுத்தவன்
திரும்பக் கேட்கிறான்
திருடியவன் சொல்கிறான்
யூ ஆர் அண்டர் அரஸ்ட்”
அப்போது இதை கூட்டம் கூட்டமாக இதைப் பேசுவேன்
திமுக தோழர்கள் கொண்டாடுவார்கள்
வேண்டாம் ஸ்டாலின் சார்
அழைத்துப் பேசுங்கள்
நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
10.01.2024

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...