Tuesday, January 30, 2024

இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது

”இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது என்ற வெறி என் நெஞ்சில் எழுந்தது” என்று

தனது வாக்குமூலத்தில் கோட்சே கூறியதாக தனது “கோட்சேயின் குருமார்கள் நூலின் 38 வது பக்கத்தில் தோழர் அருணன் கூறுகிறார்




ஏன் அந்தக் கிழவன் மீது இவ்வளவு வன்மம் அவனுக்கு?

அதற்கான காரணத்தையும் அவன் தனது வாக்குமூலத்தில் கூறுகிறான்

அதையும் தோழர் அருணன் அதே நூலின் 37 வது பக்கத்தில் வைத்திருக்கிறார்

இந்த தேசத்திற்கு காந்தி துரோகம் செய்துவிட்டதாகப் பொதுவான குற்றச்சாட்டை வைக்கும் அவன் அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகளை வைக்கிறான்

1 இந்தியை தேசிய மொழியாக முன்மொழிந்துவந்த காந்தி இஸ்லாமியர்களை திருப்த்திப்படுத்துவதற்காக இந்துஸ்தானியை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்

2 வந்தேமாதரம் பாடலை அவர் விரும்பவில்லை

3 பசு பாதுகாப்பிற்காக வாய்கிழிய பேசும் காந்தி உருப்படியாக எதுவும் செய்யவில்லை

4 அவரது உண்ணாவிரதங்கள் இந்துக்களை மிரட்டவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவுமே இருக்கின்றன

ஆக, காந்தியின் கொலையில் மொழியும் உண்டு என்பது தெளிவாகிறது

இது குறித்தான ஒரு கட்டுரையை எனது “காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” நூலில் வைத்திருக்கிறேன்

மற்றக் குற்றச்சாட்டுகளே RSS அமைப்பின் இன்றைய கொள்கை நீட்சியாக உள்ளன

14.01.1948 அன்று காந்தியாரின் உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்

அன்று அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களில் படேலும் ஒருவர்

வந்தவர்கள் யாரும் காந்தியின் கோரிக்கையை (55 கோடி) ஏற்கவில்லை

காந்தியிடம் படேல் அவர்கள் கொஞ்சம் கோவப்பட்டதாகவே தோழர் அருணன்வழி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது

நம்பிக்கை இழந்த கிழவன் 

“நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல” என்று கூறுகிறார்




30.01.1948 அன்று பிற்பகல் காந்தியை கடைசியாக சந்திக்க வந்தவர் படேல்

“இப்போது நீங்கள் என்னைப் போகவிட வேண்டும்” என்று படேலிடம் விடைபெற்றுக்கொண்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் புறப்படுகிறார்

சற்று நேரத்தில் அனைவரிடம் இருந்தும் அவரை விடைபெறச் செய்தான் கோட்சே

”நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல”

காந்தியின் இந்த சொற்கள் படேலின் இறுதி மூச்சுவரை அவரது காதில் ஒலித்துக் கொண்டேதான் இருந்திருக்கும்

இது RSS செயல் என்று நேரு சொன்னதைக்கூட விட்டுவிடலாம்

முள்ளாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரபிரசாத் அவர்கள் 13.10.1948 அன்று அன்றைய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்

அந்தக் கடிதத்தில் காந்தியைக் கொன்றவர்கள் வைக்கிற வாதங்கள் தம்மை காயப்படுத்துவதாகவும், கொலையாளியை ஒரு வீரநாயகனாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறுகிறார்

மே 14 அன்றும் அவர் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்

அதில்,

RSS கலகத்தை இஸ்லாமிய உடை அணிந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தன்னிடம் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்

இதை கூறியவர் ராஜேந்திரப்பிரசாத்

இவை எல்லாம் நடக்கத் தொடங்கி இருக்கின்றன

இந்து ஆலயங்களி இறைச்சித் துண்டை வீசிவிட்டு இஸ்லாமியர்கள் வீசியதாகவும்

தங்கள் வீடுகளுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பழியை இஸ்லாமியர்கள்மீது போடுவதையும் செய்வதுகூட 

ராஜேந்திரபிரசாத் அவர்கள் சொன்னதன் நீட்சிதான்

நல்வாய்ப்பாக இவர்கள் அவர்களாகவே அம்பலப்பட்டுப் போவதுதான்

வாக்குமூலத்தில்

சுதந்திரத்திற்கு காந்தி காரணமல்ல என்று கோட்சே கூறுகிறான்

அவனது பட்டியலில் படேலின் சகோதரர் விதல்பாய் படேலின் பெயரும் இருந்தது

அவன் அப்படிக் கூறுகிறான்

ரவியும் காந்தி காரணமல்ல என்கிறார். இப்பைப் பச்சையாக சொல்லமுடியாது என்பதால் காந்தி மட்டுமல்ல போசும்தான் என்கிறார்

03.02.1948 இல் இரண்டு காரணங்களுக்காக படேல் ராஜினாமா செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்

1 ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ஒரு வாசகர் காந்தியைக் காக்கத் தவறிய படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது

2  இதுகுறித்த தோழர் சுந்தரய்யாவின் பேச்சு

ஆக, கோட்சே என்ற RSS காரனால் காந்தி கொலைசெய்யப்பாட்டார் என்பது தெளிவு

அவன் விரும்பிய மதவெறிகொண்ட ஆட்சிக்கான பாசிச சக்திகள் இப்போது முயற்சி செய்து வருகிறார்கள்

அன்போடும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டியும் எதிர்கொள்வோம்

 


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...