Tuesday, January 2, 2024

71

 ஏகத்துக்கும் சிதைந்து

முகமும் உடலும்
எஞ்சித் தெரிந்த
சிறுபகுதி இட முலையும்
எண்ணெய்ப் பிசுக்கும்
துண்ணூறும் குங்குமமும் போதுமந்த

அசலூர்க்காரனுக்கு

பொம்பள சாமி அது எனப் 
பிடித்துக் கொள்ள

நொடிக்கு நொடி 
தாயேயெனக் கும்பிட்டான்

சுத்திக் கிடந்த செத்தைகளை 
பெருக்கித் தள்ளியவன்

சுகத்தையும் படிப்பையும்
வேலையையும் 
கலங்காத நல்ல வாழ்க்கையையும்
தன் ஒத்தை மகளுக்காய் யாசித்தவாறே

வரவா தாயே 
மழ ஓஞ்சிருச்சு 
என நகர்ந்தவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை

போய்வா தந்தையே என்ற 
தெய்வத்தின் குரல்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...