Tuesday, January 9, 2024

59

 


அக்காப் பாப்பாவும்
தங்கச்சிப் பாப்பாவும்
படுக்கை அறைச் சுவரில்
வரைய ஆரம்பிக்கிறர்கள்

அக்காப் பாப்பா
மரமொன்று வரைய

தங்கச்சிப் பாப்பா
மரம்போன்ற ஒன்றை வரைகிறாள்

மரம் போன்றதன்
கிளை போன்றதன் மேல்
பறவை போன்ற ஒன்றையும்
வரைந்து வைத்தவள்

மரம் போன்றதில்
பறவை போல ஒன்றிருப்பதால்
மரம் போன்றதே மரமென்றும்

அக்கா வரைந்தது
மரமே ஆயினும்
பறவை போன்றேனும் ஒன்றில்லாத காரணத்தால்
அது மரம் இல்லை என்றும்
சாதிக்கிறாள்
தங்கச்சிப் பாப்பா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...