Monday, January 22, 2024

மாறாக வெறுப்பல்லவா இருக்கிறது

 

இதே மாதிரி ஜனவரி மாதத்தில் ஒருநாள்
தங்கை தீபாவின் பையனுக்கு மேஜர் அறுவை
பிறந்து மூன்றாவது நாள்
தீபா மணப்பாறையில் ஒரு மருத்துவமனையில்
குழந்தை திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில்
மால் ரொட்டேஷன்
பள்ளிக்கு வந்து
இருக்கிற சன்ன சன்னமான வேலைகளை அழுதுகொண்டே முடித்துவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்கையில்
ராஜா வந்து விடுப்பு கேட்கிறான்
எங்க சாரோட பாப்பாக் குழந்தைக்கு ஆபரேஷன் சார்கூட இருக்கனும்
பொத்துக் கொள்கிறது
அவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேன்
நாற்பது அறுபது என்பதுதான் வாய்ப்பு என்பதை நானும் தோழர் கணேசும் மட்டுமே அறிவோம்
அப்போது ஒரு அம்மா வருகிறார்
தெரிந்தவர்தான்
ரெண்டு நாளா அழுதுட்டே இருக்கியாமே சாமி, கொஞ்சம் குனி என்கிறார்
நெற்றியில் துன்னூறை கோடாக கிழிக்கிறார்
நீ நம்ப மாட்ட, ஆனா கிழக்கமா திரும்பி இருக்கிற ஏந்தாயி கைவிடமாட்டா
அவளாச்சு நானாச்சு என்கிறார்
கை எடுத்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டு
சுந்தரபாண்டியனை அழைத்து அநேகமாக கல்விச் சான்றிதழ்தான் கேட்பார், கேட்டால் செலவத்திடம் கையொப்பம் பெற்று அந்த அம்மாவிடம் கொடுக்குமாறு கூறுகிறேன்
ராஜா வண்டியை எடுக்கிறான்
அந்த அம்மா அறியாதவாறு துன்னூறை அழித்துக் கொண்டு கிளம்புகிறேன்
போகும் போதும் விசும்பி இருக்கிறேன்
”ஒன்னும் ஆகாது சார், நான் கிறிஸ்டியன்தான் ஆனா அந்த அம்மா வேண்டுதலே போதும் சார். பவரான ஆத்தா சார்” என்கிறான் ராஜா
இது பக்தி
இது சக மனிதன்மீதான அன்பு
இது சக மனிதனின் துயர் நீங்குவதற்கான வேண்டுதல், பிரார்த்தனை
”ஆத்தா” என்ற அந்தத் தாயின் கத்தல் நம்பிக்கை
உங்களது ஜெய்ஸ்ரீராம் கோஷத்தில் இவை ஏதும் இல்லை நண்பர்களே
மாறாக வெறுப்பல்லவா இருக்கிறது
இதுவும் ஒரு டிசம்பர் ஆறுதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...