Saturday, August 12, 2023

வெட்டிய குழந்தைகளும் கருவிகள்தாம்

 


நாங்குநேரி சம்பவம் குறித்து நான் எழுதியதைப் படித்துவிட்டு
என்ன சார்,
வெறியோடு வெட்டிச் சாய்த்தவங்களையும் குழந்தைகள் என்கிறீர்கள்
வெட்டிச் சாய்க்கப்பட்டு மருத்துவமனையில் போராடிக்கொண்டிருப்பவர்களையும் குழந்தைகள் என்கிறீர்களே
கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லையா?
என்று நண்பர்கள் கேட்கிறார்கள்
மனசோடுதான் இருவரையும் குழந்தகள் என்று விளிக்கிறேன்
வெட்டப்பட்டவர்கள் திங்கள் முதல் சில நாட்களுக்கு பள்ளிக்கு வர முடியாது
வெட்டியவர்கள் பள்ளிக்கு வர பல காலம் ஆகும்
இரண்டிற்காகவும் வருந்துகிறேன்
பிரியத்திற்குரியவர்களே
அருவாள் மட்டும்தான் கருவி என்று கருதுகிறீர்களா?
வெட்டிய குழந்தைகளும் கருவிகள்தாம்
சாதி அருவாளையும் நம் முகவரிகளையும் நம் குழந்தைகளிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறது
”நம் குழந்தைகளிடம்” என்பதை அடிக்கோடிட்டு எடுத்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடு இறைஞ்சுகிறேன்
சாதி அவர்களது குழந்தைகளின் கைகளில் அரிவாளைக் கொடுத்து அனுப்பி இருப்பதாய் கொள்வது இந்த பிரச்சினையை நாம் நுனி மேய்வதாக ஆகும்
குழந்தைகள் கைகளில் அருவாள் வந்திருக்கிறது
இது நமக்கு மட்டுமல்ல
சாதி கொண்டாடுபவர்களுக்கும் ஆபத்தானது
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா
குழந்தை எப்ப படிக்கிறான் என்று கேட்கிறோமே தவிர
எப்போதாவது
குழந்தை எப்படி மற்றவர்களிடம் பழகுகிறான் என்று கேட்டிருக்கிறோமா?
இந்த மனநிலை பழுதானதல்லவா
என்ன மதிப்பெண் எடுக்கிறான்
போட்டித் தேர்வுகளுக்கு தோதான பாடத் திட்டமா என்பதுவரை கேட்குமளவிற்கு வந்திருக்கிறோம்
இருக்கிற பாடத் திட்டம் அன்பான பிள்ளையாக மாற்றுமா என்று கவலைப் பட்டிருக்கிறோமா?
நம்மை மாற்றிக் கொள்வோம்
அரிவாளோடு அனுப்புகிறார்கள்
நான் அன்பும் புன்னகையுமாய் அவர்களுள் நுழைவோம்
எவ்வளவு காலமாகும் தெரியாது
சக மனிதனை நேசிக்கச் சொல்லித் தருகிற கல்வித் திட்டத்தைக் கேட்போம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...