Tuesday, June 28, 2022

திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,

 


திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி அருகில் உள்ள பூங்கா இது

குழந்தைகளும் பெரியவர்களும் கணிசமாக வருகிறார்கள்
நடைபயிற்சியும் நடக்கிறது
அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது
சின்னச் சின்ன குறைகள்
சில இடங்களில் சன்னமோ சன்னமான புதர் எழுகிறது
சரி செய்யாவிட்டால் புதர் பெருக்கும்

பூச்சிகள் அண்டக்கூடும்



சறுக்குப் பலகைகள் பிடுங்கப்பட்டு சாத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
குழந்தைகளின் குதூகலத்தை சறுக்கு விளையாட்டில்தான் காண முடியும்



குழந்தைகள் அமர்ந்து விளையாட ஸ்பிரிங்கின் மேல் பறவைகளோடு உள்ள இரண்டில் ஒன்றைக் காணோம்
எதிரெதிரே இரண்டு குழந்தைகள் அமர்ந்து விளையாடும்போதுதான் அந்த இடம் மலர்ந்து சிரிக்கும்
12 வயதுக் குழந்தைகளுக்கு மட்டுமே என்று அறிவிப்பு இருக்கிறது
ஆனால் 35 வயது யுவதிகளும் இளைஞர்களும் அதில் விளையாடுகிறார்கள்
இதனால் என்றாவது ஒருநாள் ஊஞ்சல் சங்கிலி அறுந்துபோக வாய்ப்பு உள்ளது
இது நடந்தால்,
ஊஞ்சலும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகும்





இறுதியாக உள்ள சின்ன அழகான குளத்தில் நீர் இருந்தால் அழகாக இருக்கும்
திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,
சறுக்குப் பலகையை நிறுவுவது
அந்தப் பறவை பொம்மையை ஸ்ப்ரிங்கில் வைப்பது
ஊஞ்சலில் பெரியவர்கள் ஆடாமல் ஒரு காவலரைக் கொண்டு தடுப்பது
அந்தக் குளத்தில் நீரை நிரப்புவது
புதரை நீக்குவது
இதற்கான பட்ஜட் திருச்சி மாநகராட்சிக்கு ஒரு பொருட்டானதே இல்லை
இவற்றை திருச்சி மாநகர நிர்வாகம் கவனிக்க வேண்டும்

முகநூல்
28.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...