மதுரை உயர்நீதிமன்றக் கிளையை பேருந்து கடக்கும்போதே மத்தியப் பேருந்து நிலையத்தில் இருக்கும் டான் டீ கடையின் உயர க்ளாஸ் தேநீருக்கு நமது நாக்கு தயாராகிவிடும்
இறங்கியதும் முதல் வேலை அந்தக் கடைக்குப் போவதுதான்
ஊர் திரும்பும்போதும் அங்கு தேநீர் அருந்தாமல் நகர்வது இல்லை
சமீபத்தில் மதுரை அருளானந்தர் கல்லூரியில் உரையாற்ற சென்றபோதும் அப்படித்தான்
அந்த டான் டீ நிறுவனத்தை அண்ணா உருவாக்கியதற்கான காரணம் மிக முக்கியமானது
1960 களில் இலங்கைத் தோட்டத் தொழிலாளிகளது குடியுரிமையைப் பறிக்கிறது இலங்கை அரசு
பலர் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார்கள்
அவர்களுக்கான பலவிதமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார் அன்றைய முதல்வர் அண்ணா
அவர்களில் பெரும்பான்மையானோருக்கு தேயிலைத் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பது அண்ணாவின் கவனத்திற்கு வருகிறது
1968 இல் அண்ணா “டான் டீ” நிறுவனத்தை உருவாக்குகிறார்
அண்ணா குறித்து பேச நிறைய இருக்கு
முகநூல்
25.05.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்