Friday, June 3, 2022

GST COUNCIL எடுக்கிற முடிவை மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை

 GST குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு GST குறித்து சொல்லிக்கொள்கிற மாதிரி ஞானமில்லாத என்னைப் போன்றவர்களுக்கும் கொஞ்சம் புரியத் தொடங்கி இருக்கிறது

நமது நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜனின் நேர்காணல்கள் இன்னும் கொஞ்சம் தெளிவு செய்கின்றன
இன்று நான் கேட்ட CPM கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்களின் நேர்காணல் இதை எப்படி நடமுறைப்படுத்த வேண்டும் என்று கூடுதலாகத் தெளிவு செய்திருக்கிறது
GST COUNCIL எடுக்கிற முடிவை மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்
அதற்கு எதிரான சட்டத்தையும் மாநிலங்கள் நிறைவேற்ற முடியும் என்றும் தீர்ப்பு கூறியது
எனில்,
ஒரே பொருளுக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான வரியை விதிக்க முடியும்
இந்த இடத்தில்தான் தோழர் கனகராஜ் அவர்கள் எந்த ஒரு பொருள்மீது GST விதிக்கும் முன்பும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அது குறித்து ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று
இல்லாதுபோனால் ஏற்படும் சிக்கலையும் அவர் தெளிவு படுத்துகிறார்
என்ன சிக்கல் வரும்
உதாரணமாக
சர்க்கரைக்கு 20 சதவிகதம் GST யை தமிழ்நாடு விதிப்பதாகவும்
பஞ்சாப் 10 சதவிகிதம் விதிக்கிறது என்றும் கொள்வோம்
தமிழ்நாட்டு மக்கள் ஏதோ ஒரு வகையில் பஞ்சாபில் இருந்து வாங்கிக் கொள்வார்கள்
இப்படியாக எந்தப் பொருளுக்கு எந்த மாநிலத்தில் விலை குறைவோ அந்தப் பொருளை அந்த மாநிலத்தில் இருந்து வாங்கிக் கொள்வார்கள்
இதில் என்ன சிக்கல்
சர்க்கரைக்கு தமிழகம் கூடுதலாக GST விதித்தால்
தமிழ்நாட்டில் சர்க்கரை தேங்கிவிடும்
இதற்காகத்தான் உரையாடல் அவசியம் என்கிறார் தோழர் கனகராஜ்

முகநூல்
22.05.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...