Friday, June 3, 2022

தவறு செய்கிறார் ஆளுனர் என்ற எங்களது கருத்தை

 பேரறிவாளன் விடுதலையை திரு அண்ணாமலை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை என்று படுகிறது

அதை முதல்வர் உள்ளிட்டு தமிழகம் கொண்டாடுவது அவரை இன்னும் பெரிதாக துயருறச் செய்வதாகத் தெரிகிறது
பேறிவாளனை குற்றவாளி என்கிறார்
குற்றவாளியின் விடுதலையைக் கொண்டாடலாமா என்கிறார்
பேரறிவாளானின் விடுதலையை நாங்கள் கொண்டாடுகிறோம்
அது உங்களுக்கு எரிச்சலைத் தரும் என்றால் அதற்காகவே இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொண்டாடுவோம்
மற்றபடி அவர் குற்றவாளியா இல்லையா
அவரது விடுதலை ஏன் என்பது குறித்தெல்லாம் நுட்பமாக பேசுவதற்கு நிறையபேர் இருக்கிறார்கள்
அவர்கள் உமக்கு பதில் அளிப்பார்கள்
அவரது விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது
கொண்டாடுகிறோம்
அவரது விடுதலைத் தீர்ப்பிலேயே ஆளுனர் அவரை விடுதலை செய்யாதது தவறு என்றிருக்கிறது
தவறு செய்கிறார் ஆளுனர் என்ற எங்களது கருத்தை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது
எனில்,
பேரறிவாளனை ஆளுனர் விடுதலை செய்யாதது தவறு என்கிறது உச்சநீதிமன்றம்
எனில்,
தவறுக்கான குறைந்தபட்ச துறைரீதியான நடவடிக்கையாவது வேண்டாங்களா அண்ணாமலை சார்

முகநூல்
19.05.2022


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...