பரியேறும் பெருமாளை நான்கைந்துமுறை பார்த்துவிட்டு
Kaakkai Cirakinile வில் நான்கு பக்கங்களுக்கு படம்குறித்து எழுதுகிறேன்
படாத பாடு பட்டு எப்படியோ மாரிசெல்வராஜின் நம்பரைப் பெற்று பேசுகிறேன்
அந்த உரையாடல் குறித்து ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மாரி சொன்னதாக தோழர் முத்தையா கூறினார்
அந்த நீண்ட உரையாடலில் ஓரிடத்தில்
“அப்பறம் ஏன் இவனத் தடுக்கறீங்க? ன்னு கேட்பாரே கல்லூரி முதல்வர் அவர் யார் தோழர் என்று கேட்கிறேன்
உங்களுக்குத் தெரிந்தவர்தான் சார் என்கிறார்
ஒருமுறை தோழர் Karuppu Anbarasan அவர்களோடான உரையாடலில் ராமுவை சந்திக்க வேண்டும் என்று கூறினேன்
சந்திக்கலாம் என்றார்
இனி வாய்க்காது
இது மாதிரி தோழர்களை சந்திப்பதற்காகவாவது சொர்க்கம் என்று ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்
முகநூல்
27.06.2022

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்