டி.பி ஜெயின் கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி
சென்னையில் இருக்கிறது
”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்” என்று ஒரு இயக்கம் உருவாகி இருக்கிறது
அந்த அமைப்பின் சார்பில் 27.06.2022 அன்று காலை அந்தக் கல்லூரியின் வாயிலில் ஒரு போராட்டம் நடக்க இருப்பதாக அறிய முடிகிறது
SFI, DYFI, CITU, AIDWA உள்ளிட்ட அமைப்புகள் இதற்கான முன் முயற்சியில் உள்ளன
போராட்டத்திற்கான காரணம் மிக மிக முக்கியமானது
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பல பிரிவுகள் இருக்கும்
அவற்றில் சிலவற்றிற்கு அரசு உதவி கிடைக்கும்
அந்தப் பிரிவுகள் உதவி பெறும் பிரிவுக்கள் ஆகும்
மற்றவை சுயநிதிப் பிரிவுகள் ஆகும்
உதவிபெறும் பிரிவுகளுக்கான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கும்
சுய உதவிப் பிரிவுகளுக்கு அது கிடையாது
எனவே சுய உதவி பெறும் பிரிவில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை கல்லூரி நிர்வாகம் வழங்கும்
இதற்கான நிதியை மாணவர்களிடம் வசூலித்துவிடும்
செமையாக லாபம் தரும் இடம் இது
ஜெயின் கல்லூரியில் உதவிபெறும் பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களை சேர்ப்பதில்லை என்பது புகார்
புரியும்படி பேசுவதெனில்
இப்போது இயற்பியல் பாடத்திற்கு உதவிபெறும் பிரிவும் சுயநிதிப் பிரிவும் இருப்பதாகக் கொள்வோம்
40 + 40 என்ற வகையில் 80 மாணவர்களைச் சேர்க்கலாம்
தோராயமாகச் சொல்கிறேன்
உதவிபெறும் பிரிவிற்கு 15,000 ரூபாய் கட்டணம் என்றால் சுயநிதிப் பிரிவிற்கு 40,000
கொஞ்சம் கூடலாம் குறையலாம்
இப்போது இந்தக் கல்லூரியில் உதவி பெறும் பிரிவில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்றால்
சுயநிதிப் பிரிவில் சேர்க்கிறார்கள் என்று பொருள்
எனில் சுயநிதிப் பிரிவில் 80 குழந்தைகளும் சேர்க்கப் படுகிறார்கள்
ஆக 80 குழந்தைகளுக்கும் 40,000 கட்டணம் வாங்கி விடுவார்கள்
சட்டப்படி இவர்களுக்கு வரவேண்டிய கட்டணாம்
உதவி பெறும் குழந்தைகள் வகையில் 40 x 15,000 =6,00,000
சுயநிதி வழியில் 40 x 40,000 = 16,00,000
ஆகக் கூடுதல் 6,00,000 + 16,00,000 = 22,00,000
உதவி பெறும் பிரிவில் சேர்க்காததால் அனைவரும் சுயநிதிப் பிரிவு என்பதால் வரும் கட்டணம்
80 x 40,000 = 32,00,000
ஆக ஒரு பிரிவில் தோராயமாக இவர்கள் அடிக்கும் கொள்ளை 10, 00,000
எத்தனைப் பிரிவுகள்?
எத்தனை செமஸ்டர்கள்?
எனில் எவ்வளவு கொள்ளை
போக
உதவிபெறும் பேராசிரியர்களையும் ஊழியர்களையும் கொண்டே சுயநிதி பிரிவுகளுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்
இது பெரும் கொள்ளையும் குற்றமும்
அரசு அவசியம் இதில் தலையிட்டு இந்தப் புகார் உண்மை எனில் கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்
#சாமங்கவிய ஒரு மணி இரண்டு நிமிடங்கள்
26.06.2022
Monday, June 27, 2022
”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்”
Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன். வழக்கமாக செய்தி சேனலை விர...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்