Tuesday, December 17, 2019

நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

அழுதுகொண்டே வந்தவளை என்னடா என்று கேட்கிறேன்
சயின்ஸ் சார் அடிச்சிட்டார்
அய்யோ அவர் யாரையும் அடிக்க மாட்டாரே. ஏதாவது தப்பு செஞ்சிருப்ப
ம்கும் சாரும் விசாரிக்காமயே அடிக்கிறாறு. நீங்களும் விசாரிக்காமலே நாந்தான் தப்புங்கறீங்க
முகத்துல அறையறமாதிரி கேட்கிறாள் குழந்தை
எட்டாம் வகுப்பு குழந்தை அவள்
விசாரிக்காமலே தீர்ப்பை சொல்கிறீர்களே. என் அன்பிற்குரிய நீதியரசர்களே
நீங்களே ஒருமுறை நீதி கேட்டு தெருவிற்கு வந்தவர்கள்தானே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...