Friday, December 6, 2019

இருக்கேன்பா

நீண்ட நாட்களுக்குப் பிறகு நலக்குறைவால் ஆசிர்வதிக்கப்பட்டு
காலையிலிருந்தே படுக்கையில்
அவ்வப்போது எழுந்து அமர்வதும் எதாவது படிப்பதும் மீண்டும் விழுவதுமாய்
ஜெயாபுதீன் (Jeyabudheen) அழைத்தான். உங்களால பேச முடியல, பிறகு பேசறேன் என்று வைத்துவிட்டான்
மாலை பிள்ளை தமிழ் (Vetrimozhi Veliyeetagam) அழைத்திருக்கிறான். எடுக்கவில்லை என்றதும் எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறேன்
“அப்பா, தமிழ்ப்பித்தனோட (Poondi Jeyaraj) அப்பா இறந்துட்டாங்க”
அப்பா இறந்து கொஞ்ச நாட்களில் வந்திருந்த எனது கணக்கு சாரிடம் (ரெங்கராஜ் சார்)
அவர் கிளம்பும்போது சொன்னேன்,
“அப்பாவும் போயிட்டாங்க, நீங்களும் கிளம்பறீங்களே”
சார் சொன்னார்,
“அப்பா போயிட்டாரா?
இருக்கேனேடா”
தமிழ்ப்பித்தனிடம் நான் சொல்வது இதுதான்,
“இருக்கேன்பா”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...