Wednesday, December 11, 2019

“மாபெரும் ஏதோ ஒன்றைச் சொல்ல வேண்டும்”

இந்த டிசம்பர் பதினொன்றில்,
”பெரிதினும் பெரிது கேள்”
என்ற பாரதியின் வரியோடு
“மாபெரும் ஏதோ ஒன்றைச் சொல்ல வேண்டும்”
என்ற ரோசா லக்சாம்பர்க்கின் வரியும் சேர்ந்தே என்னை கிள்ளிக்கொண்டிருக்கிறது
மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே வேறு வேறு பணிக்கானவை
ஒன்று,
அற்பம் தவிர்த்து பெரியதாய்த் ஜனங்களிடமிருந்து தேடி உள்ளெடுக்கச் சொல்லும்
மற்றொன்று,
அற்பம் தவிர்த்து மிகப் பெரியதாய் ஜனங்களுக்குத் தரச் சொல்லும்
ஆனால் இரண்டிற்கும் தொடர்புண்டு
நல்லதைத் தரவேண்டும்
எனில்,
நல்லதை எடுக்க வேண்டும்
இரண்டிற்கும் முயற்சிப்போம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...