Saturday, December 21, 2019

அவனோட பேசனும்

மாலை சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போதே நான் எனது அறையைவிட்டு வெளியே வந்து வேப்ப மரத்தடியில் நின்று கொள்வேன்
வகுப்பு முடிந்து போகும் பசங்களை வம்பிழுத்து விளையாடுவதில் அப்படியொரு சுகம்
இப்படி சொல்வதுகூட சரியில்லை
அவனவனும் என்னையும், சில நேரங்களில் தமிழாசிரியர் செல்வத்தையும் வம்புக்கிழுத்து விளையாடிவிட்டு செல்வார்கள்
“சார், நீங்க கூட்டமெல்லாம் பேசுவீங்களாம்ல?”
“அதுக்கென்ன இப்ப?”
“அதுக்கு என்னவா? ஒன்னு கேக்கனும்”
“ன்ன?”
“நல்ல சாதிக்கு பொறந்தவனா இருந்தா ரேங்க் வாங்கிக்காட்டுங்கறார் எங்க அப்பா? சாதில நல்ல சாதி கெட்ட சாதின்னு இருக்கா சார்?”
“மொதல்ல சாதின்னு இருக்காடா?”
“இருக்கு சார். சாதின்னு இருந்தாதானே அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க செய்ய முடியும்”
“அதாவது இன்ன இன்ன சாதி இன்ன இன்ன வேலை செய்யனும்னு”
”ஆமாம் சார். அதுக்குத்தான கடவுள் சரியா படச்சிருக்கார்?”
”கடவுள் நல்லவராடா?”
“நல்லவர் எப்படி ஒருத்தர ஒசத்தியாவும் ஒருத்தர கீழயும் படைப்பாரா?”
“ஆமாந்தானே அதுல அவருக்கு என்ன லாபம்?”
“அப்ப யாருக்கு லாபமோ அவருதானே ஜாதிய படச்சிருக்கனும்?”
“ஆமா சார்”
”அப்ப யாரு படச்சிருப்பா?”
குழப்பத்தோடு நின்னான்.
”ஒசந்த சாதி கக்கூசுக்குப் போகுது. ஒடுக்கப்பட்ட சாதி கக்கூச சுத்தம் செய்யுது.”
“அப்ப ஒசந்த சாதிதான் கீழ் சாதிய உண்டாக்குச்சா சார்”
“ஆமா. ஆனா கீழ் சாதி இல்ல. ஒடுக்கப்பட்ட சாதின்னு சொல்லனும்”
அவனோட பேசனும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...