Wednesday, May 20, 2015

நாம் ஏன் புரளி பண்ணக் கூடாது?

“ செங்கற்பட்டு, தென்னார்க்காடு, வட ஆர்க்காடு ஆகிய மாவட்டங்களில் இருக்கும் அலுவலகங்களிலும், இவைகளுக்கு இடையேயும், இவைகளுக்கும் சென்னை செகரட்டேரியட்டுக்கும் இடையே நடக்கும் கடிதப் போக்குவரத்துகள் ஆங்கிலத்தில் இருப்பதைத் தவிர்த்து, தமிழ் மொழியில் நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும்” என்று சென்னை சட்டமன்றத்தில் திரு கஜபதி நாயக்கர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து 19.03.55 அன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திரு ஏ. சீனிவாசன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை நினைவு கூர்ந்தார்.
அவர் அகில இந்திய மாநாடு ஒன்றினில் கலந்து கொள்ள நாக்பூர் சென்றிருந்தபோது மாநாட்டுப் பந்தலில் அந்த மாநிலத்தின் அன்றைய முதல்வர் சுக்லா அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார். இருவரும் ஆங்கிலத்தில்தான் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
மேடை ஏறியதும் , அதுவரை ஆங்கிலத்தில் எல்லோரோடும் உரையாடிக் கொண்டிருந்த சுக்லா அவர்கள் இந்தியில் பேச ஆரம்பித்திருக்கிறார்.
பேசி முடிந்ததும் மீண்டும் சீனிவாசனிடம் வந்திருக்கிறார். சீனிவாசன் கேட்டிருக்கிறார்,
“ ஆங்கிலத்தில் பேசியிருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்குமே. இந்தியில் நீங்கள் பேசியது ஒன்றுமே புரியாமல் போனதே”
சுக்லா சொன்னாராம்,
“ அதனால் ஒன்றும் நட்டமில்லை பொது மேடையில் நான் இந்தியில்தான் பேசுவேன்”
சீனிவாசனுக்கு அன்று தோன்றியதாம்,
“அவர்கள் மட்டும் அவர்கள் மொழியில் பேசவேண்டும் என்று புரளி பண்ணும்போது தமிழில் பேசுவதற்கு நாம் ஏன் புரளி பண்ணக் கூடாது”

திரு கஜபதி நாயக்கர் மற்றும் ஏ.சீனிவாசன் இருவர் குறித்தும் யாரேனும் தகவல்கள் கூற இயலுமா?

2 comments:

  1. தாய் மொழியின் மீது இருக்கும் பாசத்தைப் பொறுத்து....

    ReplyDelete
    Replies
    1. புரளியை பண்ணத்தான் வேண்டும்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...