Wednesday, May 6, 2015

நிலைத் தகவல் 06.05.2015

ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு திருப்பி வழங்கினால் அன்றி இந்த ஆண்டு அந்தக் கோட்டாவில் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்த குமார் கூறியுள்ளார்.

அது குறித்தெல்லாம் நாம் பேசப் போவதில்லை. நாம் பேச சில இருக்கின்றன

1 இவரது கூற்று உண்மை எனில் அரசாங்கம் அந்த மாணவர்களுக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அரசு சொல்லியிருக்க வேண்டும்.

அது உண்மையெனில் ஏன் அரசு இதற்கு ஒத்துக் கொண்டது? 25% எனில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் கொள்ளையடிக்கும்  பெருந்தொகையில் 25% பணத்தை அரசே அல்லவா தர வேண்டியுள்ளது.

இந்தப் பெருந்தொகையை அரசு பள்ளிகளின் கட்டுமானத்தை உயர்த்துதல், கழிவறை நிர்வாகத்தை மேம்படுத்துதல், ஆய்வறைகளை மேம்படுத்துதல், இன்னும் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தல் போன்ற காரியங்களுக்கு செலவழிக்கலாமே ?

2 சொல்லியபடி அரசு பணம் தரவில்லை ஆகவே ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்கிறார்கள்.  எனவே கொடுப்பதாய் அறிவித்து கொடுக்காமல் விடுகிறோம். நீங்கள் அதையே சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்ற வகையிலான ரகசிய உடன்பாடு ஏதேனும் இருக்குமோ என்ற அச்சம் வருகிறது.

3 தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், மாணவர்களுக்குமான அந்த உரிமையை ஏன் நிர்வாகங்கள் மறுக்க வேண்டும்

பி.கு
........

ஒருக்கால் ஒத்துக் கொண்ட தொகையை அரசாங்கம் பள்ளிக்களுக்கு ஒதுக்குமானால் அதனால் பயன் பெற்ற மாணவர்களின் பட்டியலை வெளிப்படையாகப் பெற்று அரசு வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...