Thursday, May 14, 2015

14.05.2013

கீர்த்தனா ஏதோ ஒரு தொடர் பார்த்துக் கொண்டிருந்தாள். விசாரித்தபோது " மறுமணம் " என்று சொன்னாள்.
நானும் அவளருகே அமர்ந்தேன்.
ஒரு யுவதியின் கையை இளைஞன் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவள் " கையை விடுங்கள், கையை விடுங்கள் " என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அவன் அப்படியே பேதலித்துப் போனவனாய் நின்று கொண்டிருந்தான். கையை விடவும் தோன்றாதவனாய் பட்டது.
" இங்க பாருங்களேன் ,ஏங்கையைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேங்கறார் " என்று அந்தப்
பெண் கத்தவே கூட்டம் கூடிவிடுகிறது.
ஆளாளுக்கு அந்த இளைஞனை வறுத்து எடுக்கிறார்கள். போலீஸைக் கூப்பிடப் போவதாக ஒருவர் மிரட்டுகிறார். சிலர் தாக்க நெருங்குகிறார்கள்.
" அவங்க என்னோட மனைவிங்க " என்று அவன் சொன்னதும் எல்லோரும் ஒரு கணம் உறைந்து போகிறார்கள்.
" ஏம்ப்பா வொய்ப்னாலும் அவ கையப் பிடிக்காதன்னா பிடிக்கக் கூடாதுதானேப்பா. ஏன் அதை யாரும் உணரவேயில்ல"
கீர்த்தனா சரியாக வளர்ந்து வருவதாகவே படுகிறது.

8 comments:

  1. Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete
  2. மனைவியானாலும் , கேட்டுதான் தொட வேண்டும் ....இந்த புரிதல் ஆணுக்கு இருப்பது அழகு ....ஆணுக்கு என்ன தேவை என்பது கேட்டு பெண் செய்தால் அழகுக்கு அழகல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  3. உண்மைதான் தோழர்
    சரியாகத்தான் வளர்த்து வருகிறீர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  4. சரியாகத்தான் வளர்கிறாள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...