லேபில்

Thursday, May 14, 2015

கவிதை 31

ஏகத்துக்கும் சிதைந்த
முகமும் உடலும்
எஞ்சித் தெரிந்த
சிறுபகுதி இட முலையும்
எண்ணெய்ப் பிசுக்கும்
துண்ணூறும் குங்குமமும் போதுமந்த
அசலூர்க் காரனுக்கு
பொம்பள சாமி அது எனப் பிடித்துக் கொள்ள
நொடிக்கு நொடி தாயேயெனக் கும்பிட்டான்
சுத்திக் கிடந்த செத்தைகளை பெருக்கித் தள்ளியவன்
சுகத்தையும் படிப்பையும்
வேலையையும் 
கலங்காத நல்ல வாழ்க்கையையும்
தன் ஒத்தை மகளுக்காய் யாசித்தவாறே
வரவா தாயே 
மழ ஓஞ்சிருச்சு என நகர்ந்தவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
போய்வா தந்தையே என்ற தெய்வத்தின் குரல்

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023