Friday, May 15, 2015

ரசனை 07



இவனைப் போலவேதான் நானும் மகனாகவே நாயை வளர்க்கிறேன். வெளிப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் விட்டுவும் அப்படியேதான்.
ஆனால் ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) அளவிற்கெல்லாம் எங்களால் எவ்வளவு முயன்றாலும் முடியாது. உயிர்களிடத்து அப்படியொரு அன்பு.
உனக்கும் மீனாளுக்கும் எங்களது அன்பு, மரியாதை, வணக்கம்.
கீழ் உள்ள அவனது பதிவை பாருங்கள். உங்களுக்கே புரியும்.
********************************************************************************
ஞாபகம் வரும்போதுதான் நேரமிருந்தால் உணவிடுகிறேன்.. ஜிஜ்ஜு இளைத்த மாதிரி இருக்கிறது. கறுப்பும் ஜில்லுவும் கொஞ்சம் பரவாயில்லை எங்காவது குப்பைத் தொட்டிகளில் அவற்றின் உணவு கிடைத்துவிடக் கூடும்.. ஆனாலும் அவற்றை நான் பார்க்கும்போது நினைவிருந்தால், நேரமிருந்தால் உணவிட்டபடிதான் இருக்கிறேன்.. இரண்டு மூன்று நாட்களாக கறுப்புவும் ஜில்லுவும் சரியாக வீட்டுப் பக்கம் வருவதில்லை..
சாயாவும் அதன் நண்பர்களும் முன்பு போல ஜன்னலில் உட்கார்ந்து கத்துவதில்லை. காலையில் ஜன்னலை திறந்ததும் சத்தமில்லாமல் அங்கே வந்து உட்காருவது சாயாதான் என நினைக்கிறேன். நான் கிச்சனில் வேலை பார்த்தபடி இருக்க, பத்து நிமிடம் ஆனாலும் அரை மணி நேரம் ஆனாலும் சத்தமே போடாமல் பொறுமையாக காத்திருக்கிறது.. சற்று தள்ளி காம்பவுண்டில் சத்தமிடாமல் உட்கார்ந்திருக்கும் மற்ற காகங்களும் கண்ணில் படத்தான் செய்கின்றன.. நோ சவுண்டு..
மிழற்றலாக மீனாளிடம் கொஞ்சுவது போலெல்லாம் நம்மிடம் இல்லை.. வாங்கி வைத்திருக்கும் மிக்சரை அவ்வப்போது போட்டு விட்டால் சத்தமில்லாமல் தின்றுவிட்டுப் போய்விடுகிறார்கள்..
என்னங்க.. புதன் கிழமை புறப்பட்டு வியாழன் வர்றேன் என்றாள். அவ்வளவு நாள் அங்க இருந்து என்ன பண்ணப் போற..? பாலாஜிய திங்கக் கிழமை டிக்கெட் எடுத்து தரச் சொல்லி செவ்வாய் காலைல வா.. எனக்கு எக்கச்சக்கமா வேலை இருக்கு.. என்றேன்.
வேலை இருக்கு என்பதை விட இந்த பசிப் பார்வைகள் தாள முடியாதனவாகக உள்ளன என்பதே உண்மை..
நேரத்துக்கு
ஜன்னலுக்கு வெளியே நீண்டு
சோறிட்டு
தற்போது காணாமல் போன வளை கரத்தை
கைவிட்டு விட்டு காணாமல் போன
தாய்ப்பறவை என்றே
நினைத்திருக்குமோ அந்த காகங்கள்..

2 comments:

  1. அவருக்கும் அன்பான வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தனபால்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...