Tuesday, May 5, 2015

அப்பாக்களின் அழுகையை....

அறந்தாங்கியின் சந்து பொந்து வளைவுகளைக் கடந்து பிரதான சாலைக்கு வந்ததும் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட ஓட்டுனர் என்னை நோக்கி புன்னகைத்தவாறே கேட்கிறார்,

“யாருங்க சார் மகளா?”

புரியாமல் விழிக்கிறேன் இன்னமும் அதிகமாய் புன்னகையை விரித்தவாறே கேட்கிறார்,

“ உங்கள ஏத்திவிட வந்தாங்களே...”

புரிகிறது, கிருத்திகாவைக் கேட்கிறார். “ ஆமாங்க சார். இங்கதான் வேலை பார்க்கிறா. பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” இவ்வளவையும் ஏன் சொல்கிறேன் என்று தெரியாமலேயே சொல்லி முடித்தேன்.

“அந்த அழு அழறாங்களே. நின்னு தேத்திட்டு அடுத்த பஸ்ல வந்துருக்கலாமே சார்”

தலையசைக்கிறேன். அவருக்குத் தெரியாது, இன்னும் முன்னூறு பேருந்துகளை விட்டுவிட்டு முன்னூற்றி ஒன்றாவது பேருந்தென்றாலும் அதுவரையும் அவள் அழுதுகொண்டுதானிருப்பாள் என்பது.

சூப்பர் பொன்னுங்க சார். கொடுத்து வச்சிருக்கனும் என்கிறார்.

அது எப்படி மகள்களின் அழுகையை பார்க்க முடிகிற அப்பன்களுக்கு சக அப்பன்களின் அழுகையை கண்டுபிடிக்க முடிவதில்லை?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...