Wednesday, May 13, 2015

13.05.2014

இன்று சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திரு துளசி அவர்களை நண்பர் கனகராஜோடு சென்று சந்தித்தேன்.
பேசிக்கொண்டிருந்தபோது எனது “ இவனுக்கு அப்போது மனு என்று பேர் “ என்ற நூலில் வரும் சம்பவத்தை ஸ்கிட்டாக மாற்றி 10 நிமிடம் நிகழ்த்தியிருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் என்பதைச் சொன்னார்.
தயாரித்த ஆசிரியையிடம் எப்படி இதை தேர்வு செய்தீர்கள், எட்வின் யார் என்பதோ தனது நண்பர் என்பதோ தெரியுமா என்று கேட்டிருக்கிறார். தெரியாது என்று சொன்னவர் பள்ளி நூலகத்தில் படித்ததிலிருந்து அதே நினைவில் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அநேகமாக மகள், அல்லது மகன் வயதுதான் இருக்கிறது அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு. அந்த மகளை வாழ்த்தி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எத்தனையோ அமைப்புகளுக்கு எத்தனையோ நூல்களைப் பற்றி பேசப் போனாலும் ஒரு அமைப்பேனும் விவாதிக்க எடுத்துக் கொள்கிறமாதிரி ஒரு நூலையும் இன்னும் எழுத வில்லையே என்று என்னையே நான் நொந்து கொள்வது உண்டு.
ஆனாலும் தொடர்ந்து இயங்க இதுமாதிரி நிகழ்வுகளே நம்மை உந்தித் தள்ளுகின்றன.
நன்றி மகளே. நன்றி துளசி.

6 comments:

  1. வாழ்த்துக்கள் தோழர்
    தம 2

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. எண்ணம் விரைவில் நிறைவேறட்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  3. மறக்கக் கூடிய புத்தகமா அது..
    தம +

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...