Monday, April 13, 2015

தாய்த் தமிழ்ப் பள்ளி 1



நேற்று திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் இருபதாம் ஆண்டு விழாவில் பேசப் போயிருந்தேன். யார்மீது வேண்டுமாயினும் சத்தியம் செய்கிறேன் இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்த பள்ளிகளில் ஆகச் சிறந்த பள்ளி.
தாளாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், அந்தப் பள்ளியின் ஆசிரியைகள், ஊழியர்கள் யார் காலில் வேண்டுமானாலும் நான் விழுவேன். அதிலும் குறிப்பாக தாளாளரின் மனைவி இருக்கிறார்களே...
பெரிதாய் ஒரு கட்டுரை எழுதுவேன். அது வரை அவ்வப்போது அந்த நிகழ்வு குறித்த எனது நினைவலைகள் வந்து கொண்டே இருக்கும்.
எண்பதைக் கடந்த அந்தப் பள்ளியின் காவலர் தனது உடல்நிலையின் பொருட்டு பணியிலிருந்து நின்று விட்டார். இருக்க முடியாமல் தினமும் பள்ளிக்கு வருகிறார். செத்தாலும் இங்கேயே சாகிறேன் என்று. அவரை மேடைக்கு அழைக்கும் போது தாளாளரின் குரல் உடைந்தது.
அவருக்கு மரியாதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
என்னிடம் முத்தத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமலே போய்விட்டார். ஒருமுறை போய் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும்

2 comments:

  1. மனம் நெகிழ்ந்து போய்விட்டது தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...