Thursday, April 23, 2015

23.04.2013 நிலைத்தகவல்

நேற்று நானும் லெனினும் மட்டுமே வீட்டில்.
250 பக்கங்களாவது சிரத்தையோடு படித்திருப்பேன்.
கல்வியின் நோக்கம் குறித்து எவ்வளவோ பேசிவிட்டோம். குடும்பத்துக்காக, சமூகத்துக்காக, தேசத்துக்காக என்று. புரட்சியின் உச்சக் கொதிநிலையில் களத்தின் ஏதோ ஒரு இடத்திலிருந்து எழுதுகிறான்,
“ புத்திசாலித்தனமாக, விவேகமாக, வெற்றிகரமாக புரட்சியில் பங்குகொள்ள படிப்பது அவசியம்”
எதையும் புத்திசாலித்தனமாக, விவேகமாக, வெற்றிகரமாக செய்வதற்கு கல்வி அவசியம்தான்.
கல்வியின் தேவை,
லெனினுக்கு மக்கள் புரட்சிக்கு, சிதம்பரத்துக்கு அந்நியனுக்கு வளங்களை விற்பதற்கு.
உபரியாக உள்ள அரசு ஊழியர்களை நூலகப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்கிறான்.
வாரத்தில் எல்லா நாட்களும் நூலகங்கள் இயங்க வேண்டும் என்கிறான்.
ஆச்சரியமாயிருக்கிறது,
1917 வாக்கிலேயே நூலகங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட வேண்டும் என்கிறான்.
நூலக நூலகங்களில் உள்ள எந்தப் புத்தகத்தையும் ஒரு கிராமத்து நூலகத்தில் உட்கார்ந்து படிக்கக் கூடிய நிலை எப்போது வரும். சிந்திப்போம், அது குறித்து கூடிப் பேசுவோம், விவாதிப்போம். தெருவிற்கு வருவோம்.
உலக மக்களை ஒருங்கிணைப்போம். நூல்களைப் பொதுப் படுத்துவோம்.
என்னமாய் சிந்தித்திருக்கிறான் பாருங்கள்,
நூலகங்களுக்கு அனுப்பக் கூடிய நூல்களுக்கு தபால் கட்டணம் கூடாது என்று கனவு கண்டிருக்கிறான்.
இத்தனையும் உலகம் வியந்த ஒரு பெரும் உக்கிரமான மக்கள் புரட்சியின் உட்காருமளவிற்கும் அவகாசமற்ற ஒரு ஓய்வுப் பொழுதில் எழுதியிருக்கிறான்.
நேற்று லெனின் பிறந்த தினம்.
இன்று உலகப் புத்தகத் தினம்.
ஆக, இப்படி சொல்லலாம்
இன்று க்காக சிந்திக்க நேற்று பிறந்தவன்.

4 comments:

  1. தோழர் லெனின் நினைவினைப் போற்றுவோம்
    தம 2

    ReplyDelete
  2. சுரண்டல் உள்ள வரை அவன் சிந்தனை செல்லுபடியாகும்

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியா சொன்னீங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...