Monday, April 27, 2015

ரசனை 3

வெளிச்சம் படாத, வாசகனுக்காக ஏங்கும் ஒரு நல்ல புத்தகம் பற்றிய Theepika Theepa அவர்களின் கவிதை. அவர்கள் வெளியிட்டிருந்த படத்தோடே...


முட்டி மோதும்
எழுத்துக் கொம்பன்களின் காலடியில்
நசிபடுகின்றன இலக்கியங்கள்.
புத்தக வியாபாரிகளாகி விட்ட
இலக்கியவாதிகளின் புளுகுகளுக்கிடையே
மாற்றிப் போடும் புத்தகமொன்றை
தேடிக் கொண்டிருக்கிறான் வாசகன்.
கள்ளக் கையெழுத்துக்களுடன்
களமிறங்கியிருக்கிறார்கள்
விருதுக்கலையும் புகழ் நோயாளிகள்.
தன் விருப்பப்படி தளைத்துச் செல்லும்
கவிதைகளை
நிறுத்து நிறுத்துக் களைக்கும் விமர்சகர்
எழுதுவதைக் காட்டிலும்
கவிதையே புரிந்து விடுகிறதென்கிறான்
தாங்க முடியாத வாசகன்.
சந்தி சிரிக்கும் எல்லாச் சரக்குகளையும்
கடை பரப்பும் முகப்புத்தகக் காரர்கள்
விருப்பக் குறிகளை
சுடச்சுட அள்ளியெடுக்கிறார்கள்.
இன்னமும்
நூலக அடுக்குகளுக்குள்
தன் வாசகனுக்காக காத்துக் கொண்டிருக்கிறது
எல்லோரும் தவறவிட்டு விட்ட
வெளிச்சம் படாத ஒரு நல்ல புத்தகம்.
அவர்களது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/theepika.kavithaikal…

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...