Sunday, April 26, 2015

ரசனை 2

உமா ( Uma) அவர்களின் வலைநூலில் உள்ள இந்தக் கவிதை குறித்து நான் குறுக்கே புகுந்து ஏதும் சொல்லி உங்களுக்கு இடையூராய் நிற்க விரும்பவில்லை. வாசியுங்கள்... இந்தக் கவிதை யாருடையது என்று தெரிந்தால் சொல்லுங்கள். கவிதை இ. பரமசிவம் அவர்களுடையது என்கிற தகவலை உமா அவர்கள் தருகிறார்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இலையுதிர்க்கும் மரத்தைப்போலவே
இங்குக் கொஞ்சம் அங்குக் கொஞ்சமென 
நாளுக்குநாள் இறப்பவன் நான்..
எனது இறப்பில் எல்லோருக்கும்
பங்குண்டு..
எனது மரணம்
எப்போது நிகழ்ந்தாலும்
எனது உடலைச் சுற்றி இருப்போர்
அத்தனைப் பேரும் -
தானுமொரு கொலையாளி என்பதை
மறந்துவிடாதீர்கள்..
ஒருவேளை -
இந்தச் சமுதாயம் நாளை
தனது
தவறுகளை
விட்டொழிந்து நிற்குமெனில் - அன்று
மீண்டும் நான்
பிறந்துவருவேன்..
அப்போது
எனைப் பெற்றவர்களும்
நீங்களாகவே இருப்பீர்கள்!!
அவரது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/umadevicbe…

2 comments:

  1. Replies
    1. மிகவும் நன்றாக எழுதுகிறார்கள் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...