Sunday, July 31, 2016

முன்னாள் முதல்வர் பேருந்தில் பயணிக்கிறார்

கேரள பூமி மீதான பொறாமை நமக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
கேரள பூமியின் முன்னால் முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் எழுபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு அரசுப் பேருந்தில் பயணித்திருக்கிறார்.
ரயிலை விட்டு விட்டதாகவும் எனவே பேருந்தில் பயணிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவரை மிகக் கடுமையாக எதிர்க்கும் இடதுசாரி அமைச் சார்ந்தவனான எனக்கே அவரது இந்த நடவடிக்கையில் எந்த விதமான போலித் தனத்தையும் காண முடியவில்லை.
“சேட்டா” என்று அந்தப் பேருந்தின் நடத்துனர் அழைத்திருக்கிறார். (சேட்டா’ என்றால் என்ன?). அப்படி அவரால் அழைக்க முடிந்திருக்கிறது.
முன்னால் முதல்வருக்கும் அவரது மெய்க்காவலருக்கும் அந்த நடத்துனர் பயணச்சீட்டை கிழித்துக் கொடுத்திருக்கிறார். உம்மன் தனது அடையாள அட்டையை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
எல்லோருடனும் உரையாடியிருக்கிறார்.
தன்னால் நீண்ட காலமாக பேருந்தில் பயணிக்க முடியவில்லை என்றிருக்கிறார். ரயிலைத் தவறவிட்டதன் மூலம் தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
1) முன்னால் முதல்வர் பேருந்தில் பயணிக்கிறார்
2)அவரை நடத்துனர் சேட்டா என்கிறார்
3) முன்னால் முதல்வருக்கே நடத்துனர் பயணாச்சீட்டைக் கிழிக்கிறார்.
4) தனக்கான அடையாள அட்டையை ஒரு நடத்துனரிடம் எடுத்துக் காட்டுகிறார்
5) சக பயணிகளோடு ஒரு சக பயணியாகவே உறவாடியிருக்கிறார்
இதை எல்லாம் படிக்கும்பொழுது பொறாமை ஏற்படத்தான் செய்கிறது.
உடனே நம் பூமியில் இதுவெல்லாம் சாத்தியமா? இங்கும்தான் இருக்கிறார்களே என்றெல்லாம் தோன்றவில்லை.
இங்கு கலைஞர் அவர்களோ, மாண்பமை முதல்வரோ, ஏன், இன்று காமராசர் உயிரோடு இன்றிருந்தால் அவரோகூட இது சாத்தியம் இல்லை.
அங்கு உம்மன் அல்ல, அச்சுதானந்தன் மட்டுமல்ல யார் முதல்வராக வந்தாலும் இப்படித்தான் இருக்க முடியும்.
நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
அந்த எளிமைக்கு அவர்கள் மட்டும் காரணம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்டுமானம் அப்படி. ஒரு முன்னால் முதல்வர் பேருந்தில் தம்மோடு பயணிப்பது சற்ரு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தாலும் அது கடந்து அது அந்த மக்களை ஏதும் செய்யவில்லை.
ஆனால் நமது தலைவர்கள் அவர்களே விரும்பினாலும் ( மாட்டார்கள் என்பது வேறு) அதை செய்ய இயலாது. இங்குள்ள அரசியல் கட்டமைப்பும் பொது மக்களின் இயல்பும் அப்படி.
அப்படி ஒரு எளிய மற்றும் இயல்பான சூழல் தமிழ் பூமியிலும் வர வேண்டுமெனில் பொது ஜனங்களின் இயல்பையும் அரசியல் கட்டமைப்பையும் மாற்ற வேண்டும். அதற்கு நிறைய உழைக்க வேண்டும்.
எது எப்படி இருப்பினும் உம்மன் அவர்களுக்கு என் முத்தம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...