Saturday, July 23, 2016

புத்திர சோகம் பொல்லாது சரவணன்

“ஏம்மா, திடீர்னு சரவணன் டாக்டர் எரிக்கறதுக்கு முன்னாடி எழுந்து வந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்”
பொதுவா இவ்வளவு செண்டிமெண்ட்டா எப்போதுமே பேசியிராத கீர்த்தனா இப்படி விக்டோரியாவிடம் பேசியபோது ஆச்சரியத்தோடு அவளது கண்களைப் பார்க்கிறேன், கலங்கியிருக்கின்றன. விக்டோரியா கண்களும்தான். நான் ஏற்கனவே மாலையைப் போடும்போதும் அதன்பிறகு இரண்டுமுறையும் வெடித்தே அழுதிருந்தேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்தான் குடும்ப மருத்துவர். அநேகமாக அவர் படித்து வந்ததிலிருந்து.
விக்டோரியாவிற்கும் அவருக்கும் அப்படி ஒரு நல்ல பிரியம். பத்து வயது கூடுதலான கிஷோர்தான் விக்டோரியாவிற்கு சரவணன். அவரைக் கேட்காமல் எந்த ஒரு மருத்துவமனைக்கும் விக்டோரியா போனதில்லை.
ஒருமுறை கழுத்திலே கட்டி வந்து கடுமையான அவஸ்தை பட்டது. மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சைக்கு அப்பாயின்மெண்ட் எல்லாம் வாங்கிவிட்டோம். ஒய்ய்வெடுக்க வேண்டும் என்று அந்த மருத்துவர் கூறவே காலாண்டு விடுமுறையில் போவது என்று முடிவெடுத்திருந்தோம். பணம் வேறு புரட்ட வேண்டும்.
வழக்கம்போல விக்டோரியா சரவணனை ஒரு வார்த்தை கேட்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. போகிறோம். விவரங்களைக் கேட்டதும் கட்டியை உறுட்டிப் பார்க்கிறார். “ ஒன்னும் இல்லீங்க மிஸ், நாமலே எடுத்துடலாம். அந்த ரூமிற்கு போங்க “ என்கிறார். எஙகள் அனைவர்து முகச்சுளிப்பையும் தாண்டி விக்டோரியா அடுத்த அறைக்கு போய்விட்டது. சின்னதாய் லோகல் அனெஸ்தீஷியா கொடுத்து பிதுக்கி எடுத்து விட்டார்.
”ஒன்னும் இல்ல வேர்வைக் கட்டிங்க சார். உருட்டிப் பார்த்தேன். உருண்டது, எனவேதான் எடுத்துட்டேன் என்றார்.”
இது சரியா தவறா எல்லாம் தெரியாது. ஆனால் அப்படி ஒரு பந்தம்.
வியாழன்தான் எனது கைவலிக்காக போயிருந்தேன். வழக்கம்போல பயப்பட வேண்டாம் என்றவர், சுகரோடு கொஞ்சம் ஆர்த்தோ சம்பந்தப்பட்ட பிரச்சினை இது என்றும் ஒரு மாத நடைப் பயிற்சிக்குப் பிறகு சோதிக்கலாம் என்றும், அநேகமாக ஒரு மாத நடைப்பயிற்சியே இவை அனைத்தையும் சரி செய்யக்கூடும் என்றும் கூறினார்.
இது நடந்து எட்டாவது மணி நேரத்தில் இறந்திருக்கிறார்.
என்னை அவர் தந்தை போலவோ சகோதரனைப் போலவோ பார்த்தாரா இல்லையா என்று தெரியாது, விக்டோரியாவை நிச்சயமாக தாயாக பாவித்தார் என்பது தெரியும்.
புத்திர சோகம் பொல்லாது சரவணன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...